<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>மெட்ராஸ் தமிழன்</title>
	<atom:link href="http://madrasthamizhan.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://madrasthamizhan.wordpress.com</link>
	<description>நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம்</description>
	<lastBuildDate>Mon, 21 Nov 2011 02:25:14 +0000</lastBuildDate>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='madrasthamizhan.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://0.gravatar.com/blavatar/80c7dd30c3f6f21da7a298c86779383a?s=96&#038;d=http%3A%2F%2Fs2.wp.com%2Fi%2Fbuttonw-com.png</url>
		<title>மெட்ராஸ் தமிழன்</title>
		<link>http://madrasthamizhan.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://madrasthamizhan.wordpress.com/osd.xml" title="மெட்ராஸ் தமிழன்" />
	<atom:link rel='hub' href='http://madrasthamizhan.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>Shifting to blogger</title>
		<link>http://madrasthamizhan.wordpress.com/2011/11/17/shifting-to-blogger/</link>
		<comments>http://madrasthamizhan.wordpress.com/2011/11/17/shifting-to-blogger/#comments</comments>
		<pubDate>Thu, 17 Nov 2011 11:59:50 +0000</pubDate>
		<dc:creator>madrasthamizhan</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://madrasthamizhan.wordpress.com/?p=188</guid>
		<description><![CDATA[பழைய கள் தான். புதிய மொந்தையில் உள்ளது. எனது இணைய தளத்தை http://madrasthamizhan.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றி விட்டேன். வழக்கம் போல வந்து வாழ்த்தி விட்டோ திட்டி விட்டோ செல்லவும். Filed under: Uncategorized<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=madrasthamizhan.wordpress.com&amp;blog=6510586&amp;post=188&amp;subd=madrasthamizhan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>பழைய கள் தான். புதிய மொந்தையில் உள்ளது. எனது இணைய தளத்தை</p>
<p><a href="http://madrasthamizhan.blogspot.com">http://madrasthamizhan.blogspot.com</a></p>
<p>என்ற முகவரிக்கு மாற்றி விட்டேன். வழக்கம் போல வந்து வாழ்த்தி விட்டோ திட்டி விட்டோ செல்லவும்.</p>
<br />Filed under: <a href='http://madrasthamizhan.wordpress.com/category/uncategorized/'>Uncategorized</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/madrasthamizhan.wordpress.com/188/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/madrasthamizhan.wordpress.com/188/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/madrasthamizhan.wordpress.com/188/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/madrasthamizhan.wordpress.com/188/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/madrasthamizhan.wordpress.com/188/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/madrasthamizhan.wordpress.com/188/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/madrasthamizhan.wordpress.com/188/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/madrasthamizhan.wordpress.com/188/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/madrasthamizhan.wordpress.com/188/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/madrasthamizhan.wordpress.com/188/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/madrasthamizhan.wordpress.com/188/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/madrasthamizhan.wordpress.com/188/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/madrasthamizhan.wordpress.com/188/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/madrasthamizhan.wordpress.com/188/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=madrasthamizhan.wordpress.com&amp;blog=6510586&amp;post=188&amp;subd=madrasthamizhan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://madrasthamizhan.wordpress.com/2011/11/17/shifting-to-blogger/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/84c05fa496adcee5164dddae245fddb0?s=96&#38;d=http%3A%2F%2F0.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96&#38;r=G" medium="image">
			<media:title type="html">மெட்ராஸ் தமிழன்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>சுமை</title>
		<link>http://madrasthamizhan.wordpress.com/2011/05/19/%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%88/</link>
		<comments>http://madrasthamizhan.wordpress.com/2011/05/19/%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%88/#comments</comments>
		<pubDate>Thu, 19 May 2011 19:12:35 +0000</pubDate>
		<dc:creator>madrasthamizhan</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[அனுபவம்]]></category>

		<guid isPermaLink="false">http://madrasthamizhan.wordpress.com/?p=176</guid>
		<description><![CDATA[சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் எனது தாயார் ஒருவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவருக்கு கிட்டத்தட்ட 80 வயது இருக்கும். அவரும் அவரது மனைவியும் தனியாக ஒரு வீட்டில் வாழ்கின்றனர். அவர்களது ஒரே மகள் அமெரிக்காவில் தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் இருக்கிறாளாம். சம்பிரதாயமான சில வார்த்தைகளுக்கு பிறகு பெரியவர் திடீரென்று மனம் திறந்து பேச துவங்கினார். &#8220;நீங்கள் &#8216;மெயில்&#8217; செய்தித்தாளை படித்திருக்கிறீர்களா?&#8221; என்று கேட்டார். நான் சிறுவனாக இருந்த பொழுது &#8216;தி மெயில்&#8217; என்ற [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=madrasthamizhan.wordpress.com&amp;blog=6510586&amp;post=176&amp;subd=madrasthamizhan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align:left;">சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் எனது தாயார் ஒருவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவருக்கு கிட்டத்தட்ட 80 வயது இருக்கும். அவரும் அவரது மனைவியும் தனியாக ஒரு வீட்டில் வாழ்கின்றனர். அவர்களது ஒரே மகள் அமெரிக்காவில்<br />
தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் இருக்கிறாளாம்.</p>
<p style="text-align:left;">சம்பிரதாயமான சில வார்த்தைகளுக்கு பிறகு பெரியவர் திடீரென்று மனம் திறந்து பேச துவங்கினார். &#8220;நீங்கள் &#8216;மெயில்&#8217; செய்தித்தாளை படித்திருக்கிறீர்களா?&#8221; என்று கேட்டார். நான் சிறுவனாக இருந்த பொழுது &#8216;தி மெயில்&#8217; என்ற ஆங்கில நாளேடு மிக பிரபலமாக<br />
இருந்தது. நான் என்ன கூற போகிறேன் என்று அறிய மிக ஆவலுடன் பெரியவர் என்னை உற்று பார்த்து கொண்டிருந்தார். &#8220;எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஆனால் ஏனோ திடீரென்று அந்த நாளேடு நின்று விட்டதே&#8221; என்றேன்.</p>
<p style="text-align:left;">பெரியவரின் முகம் சட்டென்று வாடிவிட்டது. எனக்கோ மிக தர்ம சங்கடமாக போய் விட்டது. &#8220;ஏன் கேட்கிறீர்கள்?&#8221; என்றேன். பெரியவர் ஒரு பெரிய பெருமூச்சுடன் தொடர்ந்தார்.<br />
அந்த செய்தித்தாளின் தலைமை நிருபராக பல வருடங்கள் பணி புரிந்து நான் ஓய்வு பெற்றேன். மாலை செய்தித்தாள் என்பதால் , மின்சார ரெயிலில் போவோர், அலுவுலகம் முடிந்து வீட்டுக்கு செல்வோர் என்று பலரும் மிக ஆவலுடன் வரிசையில் நின்று வாங்கி செல்வார்கள். அதை ஒரு பொற்காலம் என்றே கூறலாம்&#8221; என்று கூறியபடி  குவளையில் இருந்த தண்ணீரை பெரியவர் குடித்தார்.</p>
<p>அவர் பேசுவதை நான் இடைமறிக்க விரும்பவில்லை. பெரியவர் குரலை கனைத்து கொண்டு தொடர்ந்தார். &#8220;ஹிந்து பேப்பருடன் எங்களால் போட்டி போட முடியவில்லை. சிறிது சிறிதாக எங்களது செலவுகள் ஏறிக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் இதற்கு மேல் தாக்கு பிடிக்க<br />
முடியாது என்று 1981ம் ஆண்டு மெயில் செய்தித்தாளை மூடிவிட்டார்கள்&#8221; என்றார். அதை கூறும்போதே அவருக்கு குரல் கரகரத்தது. ஏதோ  கூட்டத்தில் குழந்தையை தவற விட்ட தாயை போன்ற தவிப்பு அவரது குரலில் ஆழ்மனது ஏக்கம் தெரிந்தது.</p>
<p>சிறிது நேரம் அவருடன்  இருந்து விட்டு நான் விடை பெற்றேன்.ஆனால் நெடு நேரம் அவர்<br />
கூறியதை பற்றியே நினைத்து கொண்டிருந்தேன்.</p>
<p>இன்றைய தலைமுறையினர் எத்தனை பேருக்கு &#8216;மெயில்&#8217; என்று ஒரு செய்தித்தாள் இருந்தது என்று தெரியும்? அந்த செய்தி தாளை போட்டி போட்டுக்கொண்டு வாங்குவார்கள் என்று எனது தந்தை கூறியுள்ளார். ஒரு 30 வருட காலத்தில் சுவடே இல்லாமல் மறைந்து விட்ட ஒரு செய்தி தாளை பற்றி அந்த பெரியவர் எவ்வளவு ஏக்கத்துடன் பேசினார் என்று எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. இப்போது கூட சென்னை மவுண்ட் ரோடில் உள்ள ஹிந்து நாளேட்டிற்கு அடுத்த கட்டிடத்தில் &#8216;தி மெயில்&#8217; என்று எழுதியிருக்கும் அந்த பழமையான கட்டிடத்தை கடந்து செல்லும் போதெல்லாம் பெரியவரின் வார்த்தைகள் தான் எனக்கு நினைவில் வருகின்றன.</p>
<p><a href="http://madrasthamizhan.files.wordpress.com/2011/05/2003061100150301.jpg"><img class="size-medium wp-image-177 aligncenter" title="2003061100150301" src="http://madrasthamizhan.files.wordpress.com/2011/05/2003061100150301.jpg?w=300&#038;h=166" alt="" width="300" height="166" /></a></p>
<p>உண்மையில் நாம் அனைவருமே பழைய நினைவுகளின் அடிமைகளாக உள்ளோம் அல்லவா? ஒரு முறை எனது மகள் எதையோ வாங்கி கொடுக்க வேண்டும் என்று கேட்க நான்<br />
மறுத்துவிட &#8220;பத்து ரூபாய் தானேப்பா&#8221; என்றாள். எனக்கு கடும் கோபம் வந்து விட்டது. &#8220;அது என்ன பத்து ரூபாய் ‘தானே’ என்று ஒரு இளக்காரம்? உனக்கு அதன் மதிப்பு தெரியுமா? நான் பள்ளிக்கு செல்ல இரண்டு பஸ் மாறி தினமும் கஷ்ட்டப்பட்டு  போனேன். நீ என்னடாவென்றால் பொறுப்பே இல்லாமல் இருக்கிறாய்&#8221; என்று பொரிந்து தள்ளிவிட்டேன்.</p>
<p>இதை கேட்ட எனது மனைவி &#8220;இன்னும் எத்தனை வருடங்கள் தான் நீங்கள் இதே பல்லவியை பாடுவீர்கள்? நீங்கள் இரண்டு பஸ் ஏறி பள்ளிக்கு சென்றதால் உங்களது மகளும் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா&#8221; என்று கேட்க எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது.</p>
<p>சற்றே யோசித்து பார்த்தால் நாம் அனைவருமே ஒரு பெரிய பாரத்தை சுமந்து கொண்டிருக்கிறோம் என்றே தோன்றுகிறது. அது எண்ணம் என்கிற பெரும் சுமை. பிறப்பு முதல் மரணம் வரை இந்த எண்ண பாரத்திலேயே பொழுதை கழிக்கிறோம். நம்மால்<br />
சிந்திக்காமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியவில்லையே. இந்த சிந்தனையில் தானே<br />
ஆசை, பொறாமை, வக்கிரம், அன்பு, கருணை என்று பலவித பரிமாணங்கள்<br />
உருவாகின்றன? பறவைகள் மற்றும் விலங்குகள் இது போன்று சிந்திப்பது இல்லையோ?<br />
அதனால் தானோ நம்மை விட மிக ஆனந்தமாக இருக்கின்றன?</p>
<p>மனித இனத்தின் மிகப்பெரிய எதிரியே இந்த சிந்தனை சுமைதான். இதை சற்றே இறக்கி<br />
வைக்க முடியுமா? இறைவா, எண்ண சுமையை இறக்கி வைக்க ஒரு சுமைதாங்கி<br />
கொடுப்பாயா?</p>
<br />Filed under: <a href='http://madrasthamizhan.wordpress.com/category/uncategorized/'>Uncategorized</a> Tagged: <a href='http://madrasthamizhan.wordpress.com/tag/%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/'>அனுபவம்</a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/madrasthamizhan.wordpress.com/176/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/madrasthamizhan.wordpress.com/176/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/madrasthamizhan.wordpress.com/176/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/madrasthamizhan.wordpress.com/176/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/madrasthamizhan.wordpress.com/176/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/madrasthamizhan.wordpress.com/176/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/madrasthamizhan.wordpress.com/176/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/madrasthamizhan.wordpress.com/176/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/madrasthamizhan.wordpress.com/176/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/madrasthamizhan.wordpress.com/176/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/madrasthamizhan.wordpress.com/176/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/madrasthamizhan.wordpress.com/176/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/madrasthamizhan.wordpress.com/176/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/madrasthamizhan.wordpress.com/176/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=madrasthamizhan.wordpress.com&amp;blog=6510586&amp;post=176&amp;subd=madrasthamizhan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://madrasthamizhan.wordpress.com/2011/05/19/%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>7</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/84c05fa496adcee5164dddae245fddb0?s=96&#38;d=http%3A%2F%2F0.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96&#38;r=G" medium="image">
			<media:title type="html">மெட்ராஸ் தமிழன்</media:title>
		</media:content>

		<media:content url="http://madrasthamizhan.files.wordpress.com/2011/05/2003061100150301.jpg?w=300" medium="image">
			<media:title type="html">2003061100150301</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அதனினும் கொடிது?</title>
		<link>http://madrasthamizhan.wordpress.com/2010/05/15/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81/</link>
		<comments>http://madrasthamizhan.wordpress.com/2010/05/15/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81/#comments</comments>
		<pubDate>Sat, 15 May 2010 17:29:36 +0000</pubDate>
		<dc:creator>madrasthamizhan</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://madrasthamizhan.wordpress.com/?p=157</guid>
		<description><![CDATA[சில வருடங்களுக்கு முன்பு தென் இந்திய கோயில்களுக்கு விஜயம் செய்ய நேர்ந்தது. கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு அருகே உள்ள சுசீந்திரம் என்ற அருமையான கோயிலுக்கு சென்றேன். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் சேர்ந்து இங்கே &#8220;தாணுமால்ய&#8221; சுவாமியாக அருள் பாலிக்கிறார். கோயிலே ஒருவிதமான கும்மிருட்டில் இருக்கிறது. வேணுகோபால சுவாமி சன்னதியில் விளக்கு கூட யாரும் ஏற்றுவதில்லை. நான் எதிர்பார்த்ததை விட மிக மிக மோசமான நிலைமையில் இருந்தது. கோவிலில் அர்ச்சகர்கள் அனைவருமே கேரளாவை சேர்ந்த நம்பூதிரிகள் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=madrasthamizhan.wordpress.com&amp;blog=6510586&amp;post=157&amp;subd=madrasthamizhan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>சில வருடங்களுக்கு முன்பு தென் இந்திய கோயில்களுக்கு விஜயம் செய்ய நேர்ந்தது. கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு அருகே உள்ள சுசீந்திரம் என்ற அருமையான கோயிலுக்கு சென்றேன். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் சேர்ந்து இங்கே &#8220;தாணுமால்ய&#8221; சுவாமியாக அருள் பாலிக்கிறார்.</p>
<p>கோயிலே ஒருவிதமான கும்மிருட்டில் இருக்கிறது. வேணுகோபால சுவாமி சன்னதியில் விளக்கு கூட யாரும் ஏற்றுவதில்லை. நான் எதிர்பார்த்ததை விட மிக மிக மோசமான நிலைமையில் இருந்தது. கோவிலில் அர்ச்சகர்கள் அனைவருமே கேரளாவை சேர்ந்த நம்பூதிரிகள் தான். கன்யாகுமரி மாவட்டம் ஒரு காலத்தில் மலபாரை சேர்ந்ததாக இருந்தது அல்லவா? தமிழ்நாடு என்ற மாநிலம் தோன்றியபோது இந்த மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. ஆனால் இப்போது கூட கேரள மாநில தேவஸ்தானம்தான் இதை &#8220;பராமரிக்கிறது&#8221;. ஒரு நம்பூதிரியை கூப்பிட்டு &#8220;இந்த கோவிலை சுற்றி காண்பியுங்களேன்&#8221; என்று கேட்டேன். அவரும் ஒவ்வொரு சன்னதியாக என்னை அழைத்து சென்றார். பல இடங்களில் கும்மிருட்டு. மிக அசுத்தமாக இருந்தது. விளக்கு கூட ஏற்றாமல் இவ்வளவு பெரிய கோயிலா?</p>
<p>அங்கு இருந்த சிற்பங்கள் மகா அற்புதம். குதிரை போன்ற முகத்தையுடைய யாழியின் சிலை ஒன்றை நம்பூதிரி காண்பித்தார். கீழே கிடந்த ஒரு வைக்கோலை எடுத்து அந்த யாழியின் காதுக்குள் விட்டார். என்ன ஆச்சரியம்! வைக்கோல் மற்ற காதிலிருந்து வெளியே வந்தது. &#8220;கெட்டவைகளை ஒரு காதில் வாங்கி மறு காதில் விட வேண்டும் என்ற தாத்பரியம் தான் இது&#8221; என்று நம்பூதிரி கூறினார். அந்த கல் சிலைக்குள் அவ்வளவு மெல்லிய ஓட்டையை வடிவமைத்த சிற்பியின் கலை நயத்தை கண்டு வியந்தேன்.  பேசிக்கொண்டே பிரகாரத்தை சுற்றி வந்தபோது மேலே யதேச்சையாக பார்த்தேன். ஒலிம்பிக் வளைவுகள் போல ஐந்து வளையங்கள் ஒன்றுக்குள் ஒன்றாக இருந்தன. அனைத்து வளையங்களும் கற்களால் செய்யப்பட்டவை. ஒரு வளையத்தில் மற்ற வளையத்தை எப்படி விட்டார்கள்? கோயிலை விட்டு வெளியே வரும்போது மனது மிகவும் கனத்தது.</p>
<p>கேரள  பிடியில் இருப்பதால் தான் இந்த கோயிலுக்கு இந்த நிலைமை என்று நினைத்தேன். அது எவ்வளவு தவறு என்று சிதம்பரத்துக்கு சென்ற பின் தெரிந்தது.</p>
<p>இங்கு நான் கண்ட காட்சிகளோ மனதுக்கு மிகவும் அதிர்ச்சியை தரக்கூடியதாக இருந்தது. கோயில் பிராகாரத்தில் எங்கு பார்த்தாலும் காதலர்கள் ஜோடிகளாக உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். பார்க்கவே மிக அருவருப்பாக இருந்தது. அந்த நகரத்து மக்கள் கோயிலின் பிரதான வாசலில் இருந்து கோயிலின் பின் பக்கம் உள்ள தெருவுக்கு கோவிலின் பிராகாரத்தையே குறுக்கு வழியாக உபயோகித்து கொண்டிருக்கிறார்கள். ஆட்டோ முதல் எருமை மாடு வரை சர்வ சாதாரணமாக கோவிலுக்குள் வந்து போகின்றனர். நாம் இருப்பது கோவிலா அல்லது கடை வீதியா என்ற சந்தேகம் வந்து விட்டது. கோவிலுக்குள் ஒவ்வொறு சன்னிதானத்திலும் பணம் கொடுத்தால் உங்களை அர்ச்சகர் நன்றாக கவனிப்பார். இலவசமாக இறைவனை பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் ஒரு இரண்டாம்தர மனிதர் தான். இத்தனை நாட்களாக கடவுளை பார்க்க பக்தி மட்டும் இருந்தால் போதும் என்று நினைத்திருந்தேன். பணமும் வேண்டும் என்று இந்த கோவிலில் தான் கற்று கொண்டேன். ஒவ்வொறு சன்னிதானத்திலும் கையில் இரசீது புத்தகத்துடன் துரத்தும் அர்ச்சகர்களை பார்த்து மனம் வெதும்பியது. அம்பாள் சன்னிதானம் உள்ள பிராகாரத்தில் விளக்கே சுத்தமாக கிடையாது. இங்கு கொலை விழுந்தால் கூட உதவிக்கு யாரும் வர மாட்டார்கள். இறைவா, உனது சன்னிதானத்தில் இப்படி ஒரு நிலைமையா?</p>
<p>நெல்லையப்பர் கோவிலுக்கு சென்றால் கோபுரத்திலிருந்து வெளவால்கள் பறக்கின்றன. திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றாலோ பேருந்திலிருந்து நாம் கீழே இறங்கியவுடனேயே புரோக்கர்கள் நம்மை சூழ்ந்து கொள்கிறார்கள். இந்த புரோக்கர்களுக்கு பணம் கொடுத்தால் முருகனுக்கு வெகு அருகில் தரிசனம் கிடைக்கும். இல்லையென்றால் பாதி நேரம் முருகனை அர்ச்சகர்கள் மறைத்துக்கொண்டே இருப்பார்கள்.</p>
<p>திருப்பதி கோவிலில் இதை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடும்படி நடக்கிறது. எழுமலையானை தரிசிக்க மணிக்கணக்கில் காத்திருக்கும் கூட்டம். ஒரு பத்து வினாடிகள் நீங்கள் பெருமாளை பார்த்து விட்டால் கொடுத்து வைத்தவர்கள் தான். ஆடு மாடுகளை தள்ளுவது போல அங்கே இருப்பவர்கள் தள்ளுவார்கள். தோமாலை சேவை 2020ம் வருடம் வரை பணம் கட்டப்பட்டுள்ளதாம். &#8220;சீக்கிர சேவை&#8221; என்று 300 ரூபாய் வாங்குகிறார்கள். பார்த்தால் அதிலும் கிலோமீட்டர் கணக்கில் கூட்டம்.</p>
<p>இதெல்லாம் நமக்கு ஒத்து வராது, நாம் உள்ளூரில் மாம்பலத்தில் உள்ள சத்தியநாராயணர் கோவிலுக்கு போய் பெருமாளை பார்த்து கொள்ளலாம் என்று சென்றால், நரசிம்மரின் மேல் கரப்பான் பூச்சிகள் ஓடுகின்றன. ஆண்டவா, இது தான் கலி என்பதா? கோவிலை ப‌ராம‌ரித்து கொஞ்ச‌ம் சுத்த‌மாக‌ வைத்து கொள்ள‌க்கூடாதா?</p>
<p>சில வருடங்களுக்கு முன்பு எனது தந்தை சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருதய அருவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது 19 வயதே ஆன ஒருவன் மருத்துவரிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான். அவனது இதயத்தில் ஒரு &#8220;வால்வு&#8221; வேலை செய்யவில்லையாம். அரசாங்க மருத்துவமனையில் 6 மாதங்களுக்கு காத்திருக்க வேண்டுமாம். அந்த பையனின் தந்தை &#8220;ஐயா, நான் ஒரு சாதாரண விவசாயி. என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது. எப்படியாவது எனது பையனை காப்பாற்றுங்கள்&#8221; என்று மருத்துவரின் கால்களில் விழாத குறையாக கெஞ்சிக்கொண்டிருந்தார். எனக்கு என்னவோ செய்தது. டாக்டர் மிகவும் பரிவுடன் &#8220;எனது ஊதியத்தை நீங்கள் தரவேண்டாம். நான் இலவசமாகவே அறுவை சிகிச்சை செய்து தருகிறேன். ஆனால் இந்த ஆஸ்பத்திரிக்கு தர வேண்டியது இருக்கிறதே ஐயா, அதற்கு நான் என்ன செய்வது?&#8221; என்றார். அந்த பையனுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.<br />
2007ம் வருடம் ஜூலை மாதம் ஒரு நாள் மதிய உணவுக்கு பிறகு எனது தந்தை என்னை  கூப்பிட்டு &#8220;எழைகளுக்கு நிறைய செய்ய வேண்டும். குறிப்பாக மருத்துவ வசதிக்காகவும் படிப்பு வசதிக்காகவும் திண்டாடும் ஏழைகளுக்கு, அவர்கள் எந்த ஜாதி மதமாக இருந்தாலும் பரவாயில்லை, முடிந்த அளவு செய்ய வேண்டும்&#8221; என்றார். திடீரென்று ஏன் அப்படி கூறினார் என்று எனக்கு புரியவில்லை. சரியாக ஒரு மாதத்துக்கு பிறகு அவர் காலமானார்.</p>
<p>இப்போது யோசித்து பார்த்தால் எனது தந்தை கூறிய வார்த்தைகளின் உள் அர்த்தம் புரிகிறது. நாம் எத்தனை கோயில்களுக்கு சென்றாலும் கடைசியில் இறைவனை காண்பது ஏழைகளின் சிரிப்பில் தானே? ஒரு கோயிலுக்கு சென்று இறைவனை கும்பிடும் திருப்தி இதிலே கிடைக்கிறதே. அதற்காக கோயிலுக்கு போக கூடாது என்று கூறவில்லை. நாம் பிறக்கும் முன்பும் இறந்த பிறகும் பார்த்த பார்க்க போகின்ற‌ கடவுளை இது போன்ற ஏழைகளுக்கு உதவும்போது பார்க்க முடியும் அல்லவா? &#8220;கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை&#8221; என்று ஒளவையார் சும்மாவா பாடியுள்ளார்?</p>
<br />Filed under: <a href='http://madrasthamizhan.wordpress.com/category/uncategorized/'>Uncategorized</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/madrasthamizhan.wordpress.com/157/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/madrasthamizhan.wordpress.com/157/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/madrasthamizhan.wordpress.com/157/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/madrasthamizhan.wordpress.com/157/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/madrasthamizhan.wordpress.com/157/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/madrasthamizhan.wordpress.com/157/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/madrasthamizhan.wordpress.com/157/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/madrasthamizhan.wordpress.com/157/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/madrasthamizhan.wordpress.com/157/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/madrasthamizhan.wordpress.com/157/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/madrasthamizhan.wordpress.com/157/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/madrasthamizhan.wordpress.com/157/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/madrasthamizhan.wordpress.com/157/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/madrasthamizhan.wordpress.com/157/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=madrasthamizhan.wordpress.com&amp;blog=6510586&amp;post=157&amp;subd=madrasthamizhan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://madrasthamizhan.wordpress.com/2010/05/15/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>6</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/84c05fa496adcee5164dddae245fddb0?s=96&#38;d=http%3A%2F%2F0.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96&#38;r=G" medium="image">
			<media:title type="html">மெட்ராஸ் தமிழன்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>நிலைய வித்வான்</title>
		<link>http://madrasthamizhan.wordpress.com/2010/04/23/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/</link>
		<comments>http://madrasthamizhan.wordpress.com/2010/04/23/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 23 Apr 2010 20:45:19 +0000</pubDate>
		<dc:creator>madrasthamizhan</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://madrasthamizhan.wordpress.com/?p=145</guid>
		<description><![CDATA[திருமணம் ஆவதற்கு முன்பு சூரத்தில் பணி செய்து  கொண்டிருந்த நேரம். சாப்பாட்டுக்கு கஷ்டம் தான். அருகில் நல்ல ஹோட்டல்கள் கிடையாது. வேறு வழி இல்லாமல் நானே சமையல் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த நாட்கள் அவை. தினமும் சாதம் ரசம் செய்து வெறுத்து விட்டதால் &#8220;வித்யாசமாக&#8221; இருக்கட்டும் என்று உப்புமா செய்யலாம் என்று ஒரு நாள்  களத்தில் இறங்கினேன். எனது நண்பர் குமார் இந்த உப்புமாவை &#8220;நிலைய வித்வான்&#8221; என்று அடிக்கடி கூறுவார். வானொலியில் ஒளிபரப்புவதற்கு வேறு எதுவும் கைவசம் இல்லை என்றால் நிலைய [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=madrasthamizhan.wordpress.com&amp;blog=6510586&amp;post=145&amp;subd=madrasthamizhan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>திருமணம் ஆவதற்கு முன்பு சூரத்தில் பணி செய்து  கொண்டிருந்த நேரம். சாப்பாட்டுக்கு கஷ்டம் தான். அருகில் நல்ல ஹோட்டல்கள் கிடையாது. வேறு வழி இல்லாமல் நானே சமையல் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த நாட்கள் அவை.</p>
<p>தினமும் சாதம் ரசம் செய்து வெறுத்து விட்டதால் &#8220;வித்யாசமாக&#8221; இருக்கட்டும் என்று உப்புமா செய்யலாம் என்று ஒரு நாள்  களத்தில் இறங்கினேன். எனது நண்பர் குமார் இந்த உப்புமாவை &#8220;நிலைய வித்வான்&#8221; என்று அடிக்கடி கூறுவார். வானொலியில் ஒளிபரப்புவதற்கு வேறு எதுவும் கைவசம் இல்லை என்றால் நிலைய வித்வான்களை வைத்து &#8216;ஜிங் ஜிங்&#8217; என்று எதையாவது வாசிக்க சொல்வார்கள் அல்லவா, அதே போல பலகாரம் எதுவும் இல்லை என்றால் அவசரத்துக்கு இதை செய்யலாமாம்.</p>
<p>சரி, விஷயத்துக்கு வருகிறேன். ஒரு சுபயோக சுபதினத்தில் இலுப்ப சட்டியில் சிறிது ரவையை போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து கிளறி அதன் மேல் கறிவேப்பிலை தேவையான அளவு உப்பு என்று சேர்த்து கிளறி ஒரு வழியாக இறக்கி வைத்தேன். சிறிது சுவைத்து பார்த்ததில் ஓரளவு நன்றாகவே வந்திருந்தது.</p>
<p>முதன் முதலில் உப்புமா செய்திருந்ததால் மிகவும் பெருமையாக இருந்தது. நான் இருந்த கட்டிடத்தில் மொத்தம் இருபத்து நான்கு வீடுகள் இருந்தன. அதில் திருமணம் ஆகாதவர்கள் ஒரு ஆறு பேர் தான்ந, நான் செய்த உப்புமாவை மற்றவர்களிடம் கொடுத்து பாராட்டு வாங்க வேண்டும் என்று ஒரு அல்ப ஆசை</p>
<p>ஒவ்வொரு வீடாக சென்று நான் செய்த உப்புமாவை கோவில் பிரசாதம் போல எல்லோருக்கும் சிறிது சிறிது கொடுத்து விட்டு வந்தேன். எப்போதுமே நல்ல சமையல் செய்யும்போது அதை செய்தவனக்கு எதுவுமே மிஞ்சாது இல்லையா? அதே போல எனது உப்புமா சிறிது கூட எனக்கு மீதம் இருக்கவில்லை. &#8216;சரி சரி, ரொம்ப ஆட வேண்டாம்&#8217; என்று நீங்கள் கூறுவது கேட்கிறது. மேலே படியுங்கள்.</p>
<p>நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று தெரிந்தவர்கள் அனைவருக்கும் எனது உப்புமாவை கொடுத்ததில் உள்ளூர ஒரு பெருமிதம். அன்று இரவு என்னால் சரியாக தூங்கவே முடியவில்லை. வெளியே ஒரே சத்தமாக இருந்தது. ஆனால் ஒரே அசதியாக இருந்ததால் எழுந்திருக்க முடியவில்லை.</p>
<p>மறு நாள் காலை எனது நண்பன் வீட்டுக்குசென்றேன். அவனது முகமே ஒரு மாதிரி வெளிறி போயிருந்தது.</p>
<p>என்னை பார்த்த பார்வை சற்றே வித்யாசமாக இருந்தது. அது பயமா அல்லது கொலை வெறியா அல்லது இரண்டுக்கும் நடுவில் எதாவதா என்று நான் யோசிப்பதற்குள் அடுத்த வீட்டுக்காரன் வயிற்றில் கையை வைத்தபடியே வெளியே வந்தான். ஏதோ நடந்திருக்க வேண்டும். ஆனால் என்ன என்று தான் தெரியவில்லை. நான் பேச வாயை திறப்பதற்குள் எனது நண்பன் &#8220;அட கடன்காரா, செய்வதை எல்லாம் செய்து விட்டு ஒன்றும் தெரியாதவன் போல நிற்கிறாயே&#8221; என்று என்னை அடிக்க வந்தான். அவன் கையை தூக்க அப்படியே &#8220;அம்மா&#8221; என்றுஅடி வயிற்றை பிடித்து கொண்டே ஆடிக்கொண்டே உள்ளே ஓடினான்.  சொல்லி வைத்தாற்போல எதிர் வீடு, பக்கத்து வீடு என்று அந்த கட்டிடத்தில் இருந்த அனைவருக்கும் பேதி. இதை தான் &#8216;ஆடி கழிவு&#8217; என்று கூறுகிறார்களோ? . அப்படி என்ன செய்து விட்டேன் நான்? ஒ, எல்லாம் அந்த உப்புமாவின் வேலையா?</p>
<p>என்னை உயிரோடு இவர்கள் கொளுத்தும் முன் அந்த இடத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்று உடனடியாக எனது வீட்டுக்குள் பொய் ஒளிந்து கொண்டேன். அப்படி என்னதான் தவறு நடந்திருக்க கூடும்? &#8220;சமைத்து பார்&#8221; புத்தகத்தை ஒரு முறை மீண்டும் படித்தேன். மிக முக்கியமான முதல் வரியை நான் படிக்க மறந்ததால் வந்த வினை. &#8220;ரவையை வாணலியில் வறுத்து எடுத்து கொள்ளவும்&#8221; என்று இருந்தது. இதை யாரும் ஏன் என்னிடம் முதலிலேயே கூறவில்லை? ஒரு திரைப்படத்தில் நடிகர் ஜனகராஜ் சிகரெட் என்று நினைத்து வாயில் பட்டாசை கொளுத்தி கொள்வாரே, அது தான் ஞாபகம் வந்தது. எது எப்படியோ, இந்த அனுபவத்துக்கு பிறகு நான் ஏதாவது புதிய பலகாரத்தை செய்தால் அக்கம் பக்கத்தில் உள்ள அனைவரும் ஏதோ ஊரடங்கு சட்டம் அமலில் உள்ளது போல தப்பித்து விடுகிறார்கள்! நீங்களாவது கொஞ்சம் சாப்பிடுங்களேன்!</p>
<br />Filed under: <a href='http://madrasthamizhan.wordpress.com/category/uncategorized/'>Uncategorized</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/madrasthamizhan.wordpress.com/145/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/madrasthamizhan.wordpress.com/145/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/madrasthamizhan.wordpress.com/145/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/madrasthamizhan.wordpress.com/145/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/madrasthamizhan.wordpress.com/145/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/madrasthamizhan.wordpress.com/145/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/madrasthamizhan.wordpress.com/145/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/madrasthamizhan.wordpress.com/145/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/madrasthamizhan.wordpress.com/145/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/madrasthamizhan.wordpress.com/145/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/madrasthamizhan.wordpress.com/145/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/madrasthamizhan.wordpress.com/145/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/madrasthamizhan.wordpress.com/145/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/madrasthamizhan.wordpress.com/145/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=madrasthamizhan.wordpress.com&amp;blog=6510586&amp;post=145&amp;subd=madrasthamizhan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://madrasthamizhan.wordpress.com/2010/04/23/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/84c05fa496adcee5164dddae245fddb0?s=96&#38;d=http%3A%2F%2F0.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96&#38;r=G" medium="image">
			<media:title type="html">மெட்ராஸ் தமிழன்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>காணி நிலம் வேண்டும்</title>
		<link>http://madrasthamizhan.wordpress.com/2010/02/03/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://madrasthamizhan.wordpress.com/2010/02/03/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Wed, 03 Feb 2010 11:21:12 +0000</pubDate>
		<dc:creator>madrasthamizhan</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://madrasthamizhan.wordpress.com/?p=123</guid>
		<description><![CDATA[தனக்கு என்று ஒரு வீடோ மனையோ மனிதனுக்கு இருந்து விட்டால் வாழ்க்கையில் ஏதோ &#8216;சாதித்து&#8217; விட்ட பெருமை வந்து விடுகிறது என்னவோ உண்மை தான்.  என்ன இருந்தாலும் நம்முடைய சொந்த வீடு, சொந்த நிலம் எனும் போது ஒரு அலாதி மகிழ்ச்சி வருகிறது அல்லவா? என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் சென்னைக்கு அருகில் ஒரு நிலம் இருப்பதாகவும் சில வருடங்களில் அதன் விலை கண்டிப்பாக உயர்ந்து விடும் என்று கூறியவுடன், &#8216;சரி, ஒரு முறை போய் தான் பார்ப்போமே&#8217; என்று சென்று வந்தேன். நண்பன் கூறியது என்னவோ [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=madrasthamizhan.wordpress.com&amp;blog=6510586&amp;post=123&amp;subd=madrasthamizhan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>தனக்கு என்று ஒரு வீடோ மனையோ மனிதனுக்கு இருந்து விட்டால் வாழ்க்கையில் ஏதோ &#8216;சாதித்து&#8217; விட்ட பெருமை வந்து விடுகிறது என்னவோ உண்மை தான்.  என்ன இருந்தாலும் நம்முடைய சொந்த வீடு, சொந்த நிலம் எனும் போது ஒரு அலாதி மகிழ்ச்சி வருகிறது அல்லவா? என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் சென்னைக்கு அருகில் ஒரு நிலம் இருப்பதாகவும் சில வருடங்களில் அதன் விலை கண்டிப்பாக உயர்ந்து விடும் என்று கூறியவுடன், &#8216;சரி, ஒரு முறை போய் தான் பார்ப்போமே&#8217; என்று சென்று வந்தேன்.</p>
<p>நண்பன் கூறியது என்னவோ சரிதான், ஆனால் &#8216;சென்னைக்கு அருகில்&#8217; என்று கூறியதில் தான் சற்றே திருத்தம். செங்கல்பட்டை எல்லாம் தாண்டி ஒரு சிறிய கிராமத்தில் அந்த நிலம் இருந்தது. ஆனால் சும்மா சொல்லக்கூடாது, எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென வயல் வெளிகள், கவலைககளை மறந்து மேயும் பசு மாடுகள், அருகிலேயே ஒரு புராதனமான கோவில், ஐந்து அடியிலேயே அருமையான நிலத்தடி தண்ணீர் என்று என் மனதை கொள்ளை கொண்டு விட்டதால், உடனடியாக பணத்தை பிரட்டி அந்த நிலத்தை வாங்க முடிவு செய்தேன். எனக்கு நிலத்தை பதிவு செய்ய வேண்டும் என்று தெரியுமே தவிர, அதற்கான வழிமுறைகள் என்னவென்று தெரியாததால், அந்த பொறுப்பை நண்பனிடமேயே கொடுத்து விட்டேன். &#8220;எதற்கும் கவலைப்படாதே, பத்திரப்பதிவுக்கு நீ கொடுக்கும் பணத்திலேயே எல்லாவற்றையும் சேர்த்து நான் பார்த்து கொள்கிறேன்&#8217; என்று கூறினான்.</p>
<p>ஒரு நல்ல நாள் பார்த்து பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்றோம். வண்டியில் செல்லும் போது என்னுடைய நினைவலைகள் சற்றே பின்னோக்கி சென்றன. பல வருடங்களுக்கு முன்பு நான் செளதி அரேபியாவுக்கு செல்வதற்கு முன் என்னுடைய சார்பாக எனது தந்தையை அலுவல் ரீதியான தஸ்தாவேஜுகளில் கையெழுத்து போட வைப்பதற்காக (Power of Attorney)சார்பதிவாளர் (Sub- Registrar) அலுவலகத்துக்கு சென்றேன். அந்த அலுவலகத்தில் நடுத்தர வயது நிரம்பிய ஒரு பெண் சார்பதிவாளராக இருந்தார். இது போன்ற அலுவலகங்களில் பணம் கொடுக்காவிடில் நமது காரியம் எதுவுமே நடக்காது என்று பிறர் கூற கேட்டிருக்கிறேன். ஆனால் ஒரு பெண் லஞ்சம் வாங்க மாட்டார் என்றொரு நம்பிக்கையில் (!) எனது வேலை முடிந்த உடன் மிகவும் தயங்கி தயங்கி ஒரு ஐந்நூறு ருபாய் நோட்டை எனது தந்தையிடம் கொடுத்து அவரிடம் கொடுக்க சொன்னேன்.</p>
<p>அந்த அலுவலகத்தில் ஒரு மேசைக்கும்  மற்றொரு மேசைக்கும் திரையோ அல்லது வேறு எந்த விதமான ஒளிவு மறைவோ கிடையாது. எல்லோரும் மற்ற எல்லோருடைய நடவடிக்கைகளையும் தாராளமாக பார்க்கலாம்.ஐந்நூறு ரூபாய் நோட்டை எனது தந்தை அந்த பெண்மணியிடம் கொடுத்தது தான் தாமதம். பிரளயம் என்றால் என்ன என்று அன்று கண்டு கொண்டேன். &#8220;இன்னாது, ஐந்நூறு ரூபாயா  குடுக்கற கபோதி, இது எந்த மூலைக்கு?&#8221; என்று கிட்டத்தட்ட ஒரு பதினைந்து நிமிடங்களுக்கு சரமாரியாக சிறப்பான சென்னை தமிழில் எனது தந்தையை அர்ச்சனை செய்து விட்டாள். தான் ஒரு பெண் என்றோ, ஒரு பெரியவரை இப்படி அசிங்கமாக திட்டுகிறோம் என்றோ மற்றவர்கள் பார்க்கிறார்களே என்றோ அவளுக்கு சிறிதளவும் வெட்கமே இல்லை. முடிவில் ஆயிரத்தி ஐந்நூறு ரூபாயை கறந்து விட்டு தான் எங்களிடம் அந்த காகிதங்களை கொடுத்தாள்.</p>
<p> நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. ஏற்கனவே ஏற்பட்ட இந்த அனுபவத்தால் சார்பதிவாளர் அலுவலகம் என்றாலே ஒருவித பயம் எனக்கு. அதனால் நண்பனை அழைத்து கொண்டு  ஒரு சுபயோக சுபதினத்தில் புதிதாக வாங்கிய நிலத்தை பதிவு செய்வதற்காக சென்றேன். நான் அந்த அலுவலகத்தில் நுழையும்போது மணி மதியம் ஒன்றரை. சார்பதிவாளர் குனிந்த தலை நிமிராமல் வேலை செய்து கொண்டிருந்தார். அவரை சுற்றி ஒரு பத்து பேர் நின்று கொண்டிருந்தனர்.</p>
<p>எனது நண்பன் புதிதாக ஒரு நபரை அறிமுகப்படுத்தினான். அவருடைய கைகளில் கத்தை கத்தையாக தஸ்தாவேஜுகள் இருந்தன. என்னுடைய நிலத்துக்கான காகிதங்களை சரியாக எடுத்து கொடுத்து கையெழுத்து போட வேண்டிய இடங்களை எல்லாம் அந்த நபர் சொல்லிக்கொடுத்தார். அவர் சென்ற பின் அவர் யார் என்று நண்பனிடம் கேட்டேன். &#8220;ஏஜென்ட்&#8221; என்று கூறினான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. &#8216;சரி, அல்லாவற்றையும் நண்பன் பார்த்து கொள்கிறான் அல்லவா, நாம் ஏன் மண்டையை போட்டு உடைத்து கொள்ள வேண்டும்&#8217; என்று எண்ணினேன்.</p>
<p>மணி ஒன்றரை ஆகியும் கூட சார்பதிவாளர் தனது நாற்காலியில் இருந்து எழவே இல்லை. &#8220;அடடா, தனது கடமையில் எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருக்கிறார். அதுவும் அரசாங்க அலுவலகத்தில் இப்படி ஒரு அதிசயமா?&#8221; என்று நினைத்துக்கொண்டேன். எனது தஸ்தாவேஜுகளை ஏஜென்ட் சார்பதிவாளரிடம் கொடுக்கும்போது மணி கிட்டத்தட்ட இரண்டு ஆகி விட்டது.</p>
<p>அப்போது அழுக்கு வேட்டியுடன் ஒரு விவசாயி உள்ளே நுழைந்தார். சற்றே வயதான மனிதர். வாழ்க்கையில் பல அனுபவங்களை பெற்றதற்கான கோடுகள் அவரது முகத்தில் தெரிந்தன. நேரிடையாக சார்பதிவாளரிடம் வந்து ஏதோ ஒரு காகிதத்தை நீட்டினார். அவ்வளவுதான். மனிதருக்கு வந்ததே கோபம். விவசாயியை கண்டபடி  கத்தி தீர்த்து விட்டார். &#8220;என்னை என்னவென்று நினைத்து கொண்டிருக்கிறாய் நீ? மனிதன் சாப்பிட வேண்டுமா வேண்டாமா&#8221; என்று ஏக வசனத்தில் அந்த பெரியவரை திட்டி தீர்த்து விட்டார். எனக்கு தூக்கி வாரி போட்டு விட்டது. &#8220;ஒரு ஓரமாய் போய் உக்காரு&#8221; என்று அவரை விரட்டி விட்டார்.</p>
<p>எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. எனது நண்பனின் முகத்தை பார்த்தேன். எனது  எண்ண அலைகளை தெரிந்து கொண்டவன் போல &#8220;இதுக்கு தான் ஏஜென்ட் மூலம் போக வேண்டும். நாம் ஏஜென்டிடம் பணத்தை கொடுத்து விட்டால் மாலையில் அவன் சார்பதிவாளர் வீட்டுக்கே சென்று பட்டுவாடா செய்துவிடுவான். வர வர இந்த லஞ்ச ஒழிப்பு துறையின் தொல்லை தாங்க முடியவில்லை. ரொம்ப அதிகமாக பணம் கேட்கிறார்கள் (!) அதனால் தான் நேரிடையாக பணத்தை வாங்காமல் ஏஜென்ட் மூலமாக வாங்குகிறார்கள். நமக்கும் நேரம் மிச்சமாகிறது. ஒரு நாளைக்கு எவ்வளவு காகிதங்களில் கையெழுத்து போடுகிறாரோ அவ்வளவு பணம். அதனால் தான் சாப்பிட கூட நேரம் இல்லாமல் வேலை செய்கிறார் &#8221; என்று சொல்லி கொண்டே போனான்.</p>
<p>&#8220;அந்த விவசாயியை பார்த்தால் பாவமாக இருக்கிறது&#8221; என்று கூறினேன். அதற்கு நண்பன் &#8221;ஒரு முறை அடிபட்டு விட்டால் அவரும் ஏஜென்ட் மூலமாக பணத்தை கொடுப்பார்&#8221; என்று கூறினான். சுவற்றில் காந்தியின் புகைப்படம் தொங்கி கொண்டிருந்தது.  அந்த பெரியவர் முகம் சுருங்கி ஒரு ஓரமாக போய் உட்கார்ந்து விட்டார்.</p>
<p>&#8220;ஊருக்கும் வெட்கமில்லை, இந்த உலகுக்கும் வெட்கமில்லை, யாருக்கும் வெட்கமில்லை &#8221; என்ற கவிஞர் கண்ணதாசனின்  பாடல் வரிகள் மனதில் ஏனோ தேவையில்லாமல் வந்தன. எனது தஸ்தாவேஜுகளை ஏஜென்ட் கொண்டு வந்து கொடுத்தார். அதன் பின்னர் எனக்கு பிறகு வந்த ஒருவரின் தஸ்தாவேஜுகளை சார்பதிவாளர் பார்க்க ஆரம்பித்தார். விவசாயி அங்கேயே உட்கார்ந்திருந்தார்.</p>
<p>நாங்கள் சென்னையை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தோம். சார்பதிவாளரிடம் அந்த விவசாயி ஏன் தட்டி கேட்கவில்லை? படிப்பறிவு இல்லை என்பதாலா? அல்லது ஏழை என்பதாலா? &#8220;படித்த&#8221; எனக்கு அவர் சார்பாக சார்பதிவாளரிடம் கேட்க ஏன் தோன்றவில்லை?  &#8216;நமது வேலை எப்படியாவது நடந்தால் போதும், மற்றவனை பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்&#8217; என்ற சுயநலமா? மனசாட்சியின் குரலுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த பெரியவர் எத்தனை நேரம் அங்கு காத்திருந்தாரோ? இன்னும் எத்தனை நாட்கள் அவர் இங்கு அலைய வேண்டி இருக்குமோ?</p>
<p> வண்டி தாம்பரத்தை நோக்கி வரும்போது ஒரு சிற்றுண்டி விடுதியில் தேனீர் அருந்துவதற்காக வண்டியை நிறுத்தினோம். பெரியவரின் முகத்தை என்னால் மறக்க முடியவில்லை. நண்பனிடம் கூறினேன். &#8220;சரிதான், விடுடா&#8221; என்றான். தேனீரை அருந்தும் போது அங்கிருந்த வானொலி பெட்டியில் பாடல் அலறிக்கொண்டிருந்தது. &#8220;கொன்றால் பாவம் தின்றால் போச்சு இது தான் என் கட்சி&#8221;.</p>
<br />Filed under: <a href='http://madrasthamizhan.wordpress.com/category/uncategorized/'>Uncategorized</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/madrasthamizhan.wordpress.com/123/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/madrasthamizhan.wordpress.com/123/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/madrasthamizhan.wordpress.com/123/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/madrasthamizhan.wordpress.com/123/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/madrasthamizhan.wordpress.com/123/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/madrasthamizhan.wordpress.com/123/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/madrasthamizhan.wordpress.com/123/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/madrasthamizhan.wordpress.com/123/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/madrasthamizhan.wordpress.com/123/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/madrasthamizhan.wordpress.com/123/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/madrasthamizhan.wordpress.com/123/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/madrasthamizhan.wordpress.com/123/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/madrasthamizhan.wordpress.com/123/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/madrasthamizhan.wordpress.com/123/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=madrasthamizhan.wordpress.com&amp;blog=6510586&amp;post=123&amp;subd=madrasthamizhan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://madrasthamizhan.wordpress.com/2010/02/03/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>9</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/84c05fa496adcee5164dddae245fddb0?s=96&#38;d=http%3A%2F%2F0.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96&#38;r=G" medium="image">
			<media:title type="html">மெட்ராஸ் தமிழன்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அண்ணன் என்னடா தம்பி என்னடா..</title>
		<link>http://madrasthamizhan.wordpress.com/2009/08/05/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/</link>
		<comments>http://madrasthamizhan.wordpress.com/2009/08/05/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/#comments</comments>
		<pubDate>Wed, 05 Aug 2009 17:51:34 +0000</pubDate>
		<dc:creator>madrasthamizhan</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://madrasthamizhan.wordpress.com/?p=109</guid>
		<description><![CDATA[பல வருடங்களுக்கு முன்பு எஸ்.வீ.சேகரின் நாடகம் ஒன்றில்  கீழ்க்கண்ட வசனங்கள் இடம் பெறும். ஒருவர் சேகரிடம் சென்று கேட்பார், &#8220;ஏன் சார், எப்ப பாத்தாலும் பணம் பணம்னு பேயா அலயுறீங்களே, உங்களுக்கு &#8216;பணப்பேய்&#8217; அப்படின்னு ஒரு பட்டம் கொடுத்துடலாமா?&#8221; சேகர் அதற்கு மிகவும் வெட்கத்துடன், &#8220;ஐயோ, வேண்டாங்க, பட்டம் எல்லாம் வேண்டாம்&#8221;  &#8221;அப்போ?&#8221; &#8220;பட்டமெல்லாம் வேண்டாம். பணமா குடுத்துடுங்க!&#8221; கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் இந்த வசனத்தில் எவ்வளவு யதார்த்தம் இருக்கிறது பாருங்கள். நானும் பல முறை பார்த்து [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=madrasthamizhan.wordpress.com&amp;blog=6510586&amp;post=109&amp;subd=madrasthamizhan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>பல வருடங்களுக்கு முன்பு எஸ்.வீ.சேகரின் நாடகம் ஒன்றில்  கீழ்க்கண்ட வசனங்கள் இடம் பெறும்.<br />
ஒருவர் சேகரிடம் சென்று கேட்பார்,</p>
<p>&#8220;ஏன் சார், எப்ப பாத்தாலும் பணம் பணம்னு பேயா அலயுறீங்களே, உங்களுக்கு &#8216;பணப்பேய்&#8217; அப்படின்னு ஒரு பட்டம் கொடுத்துடலாமா?&#8221;</p>
<p>சேகர் அதற்கு மிகவும் வெட்கத்துடன்,</p>
<p>&#8220;ஐயோ, வேண்டாங்க, பட்டம் எல்லாம் வேண்டாம்&#8221;</p>
<p> &#8221;அப்போ?&#8221;</p>
<p>&#8220;பட்டமெல்லாம் வேண்டாம். பணமா குடுத்துடுங்க!&#8221;</p>
<p>கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் இந்த வசனத்தில் எவ்வளவு யதார்த்தம் இருக்கிறது பாருங்கள். நானும் பல முறை பார்த்து விட்டேன், &#8220;வாழ்க்கை என்றால் பணம் மட்டும் தானா?&#8221; என்று சில பேர் கேட்பார்கள். அப்படி கேட்பவர்கள் எல்லோருமே பணக்காரர்களாக இருப்பார்கள்!</p>
<p>இன்றைய உலகில் பணம் இல்லாமல் யாராவது இருந்தால் அவர்களை நாய் கூட மதிக்காது என்பது தான் கசப்பான உண்மை. மனிதன் பிறந்த நிமிடம் முதல் இந்த பணம் என்னும் வேதாளம் அவனை தொற்றிக்கொள்கிறது. பிறப்பு சான்றிதழ் வேண்டுமா? பணத்தை வெட்டுங்கள். குழந்தைக்கு உடல் நலம் சரியில்லையா? மருத்துவரிடம் கூட்டி சென்றால் தலைவலிக்கு கால்களில் இருந்து கழுத்து வரை அனைத்து பரிசோதனைகளையும் செய்ய சொல்வார். அதையும் ஒரு குறிப்பிட்ட Labல் தான் செய்ய வேண்டும்.</p>
<p>குழந்தையை பள்ளியில் சேர்க்க வேண்டுமா? முதல் நாள் இரவில் இருந்தே வரிசையில் நின்று விண்ணப்ப படிவத்தை வாங்கி பள்ளியில் கொடுத்தால் கட்டிட நிதி என்று நன்கொடையை கறந்து விடுகிறார்கள். குழந்தை சற்றே பெரிய வகுப்பை அடைந்தால் &#8216;ட்யூஷன்&#8217; என்ற பெயரில் அவர்களை வாட்டி வதைப்பது மற்றொறு கலை. ஒரு வழியாக பள்ளியை முடித்து கல்லூரியில் சேர வேண்டும் என்றால் அதற்கான நன்கொடை தனியாக. நம் மக்களுக்கு தெரிந்ததெல்லாம் நமது பையன்/பெண் டாக்டராகவோ இஞ்ஜினியராகவோ ஆக வேண்டும் என்பது தானே. உலகத்தில் வேறு தொழிலே கிடையாதே. அதனால் எப்பாடு பட்டாவது கடனை உடனை வாங்கி இந்த இரண்டு படிப்புகளில் ஏதாவது ஒன்றில் சேர்த்து  ஜென்ம சாபல்யத்தை அடைவார்கள். எல்லாவ‌ற்றுக்கும் தேவை ப‌ண‌ம் ப‌ண‌ம் ப‌ண‌ம் தான்.</p>
<p>சரி, எப்படியோ படிப்பை ஒரு வழியாக முடித்தால் அடுத்த தடை வேலை. ஏற்கனவே படித்து முடித்து வெளியே  இருப்பவனே வேலைக்கு சிங்கி அடித்து கொண்டிருக்கிறான். இதில் புதிதாக வேறா? சரி, எப்படியோ எவனெவன் கால் கையிலோ விழுந்து கொடுக்க வேண்டியதை கொடுத்து பையனை வேலையில் சேர்த்தால், தான் வாடகை வீட்டில் இருப்பது அப்போது தான் திடீரென்று ஞாபகம் வரும். உடனே வங்கிக்கு ஓடி டாமேஜரிடம் பல் இளித்து ஒரு கடனை வாங்கி வீட்டை கட்டி முடித்து நிமிரலாம் என்று நினைக்கும் போதே பெண்ணுக்கு திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம் வந்து விடும்.</p>
<p>அதற்குள் பதவி காலம் வேறு முடியும் தருவாயாக இருக்கும். சரி, ஓய்வு பெற்ற பணத்தில் பெண்ணுக்கு ஒரு வழியாக கல்யாணத்தை செய்து முடித்து &#8216;அம்மாடி&#8217; என்று மூச்சு விட்டால் ஆடி சீர், ஆடாத சீர் என்று ஒவ்வொன்றாக ஆரம்பித்து விடும். அதை எல்லாம் முடித்து ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்தால் எங்கே விடுகிறார்கள்? சாலைக்கு பைபாஸ் இருக்கிறதோ இல்லையோ, இதயத்துக்கு கண்டிப்பாக பைபாஸ் செய்தே ஆக வேண்டும். அதுவும் அப்போலோவில் செய்தால் தான் இன்னும் விசேஷம்.</p>
<p>எனது தந்தையும் என்னை போல பிழைக்க தெரியாத ஒரு நேர்மையான அதிகாரியாக தானே இருந்தார். உண்மையாக இரு, திருடாதே, பொய் சொல்லாதே என்று சொல்லி சொல்லி எங்களை எல்லாம் வளர்த்தார். முந்தின நாள் இரவு வரை நன்றாக பேசிக்கொண்டிருந்தவர் திடீரென்று காலமானதில் குடும்பமே நிலைகுலைந்து போய்விட்டது. காரியத்தை எல்லாம் முடித்து விட்டு நான்காவது நாள் சுடுகாட்டில் உள்ள மாநகராட்சி அலுவலரிடம் சென்று இறப்பு சான்றிதழை கேட்டேன். இரண்டு முறை அலைக்கழித்தார். எனது மர மண்டைக்கு அவரது தேவை அப்போது தான் உறைத்தது. &#8216;சார், நீங்க ஆனந்த பவன் வாசலுக்கு வந்துடுங்க, எல்லா சான்றிதழ்களையும் கொடுத்து விடுகிறேன்&#8217; என்றார். அங்கு சென்று பார்த்தால் அவரது பத்து விரல்களிலும் ஜொலிக்கும் மோதிரங்கள். கால் விரல்களிலும் மோதிரங்கள் இருந்தனவா என்று தெரியவில்லை! பணம் கை மாறிய பிறகு, &#8220;உங்களுக்கு Legal Heir சான்றிதழ் வேண்டியிருக்குமே&#8217;  என்று கேட்டார் (அட, இது இவருக்கு எப்படி தெரியும்?). &#8216;ஓண்ணும் கவலைப்படாதீங்க சார், என்னோட wife அந்த டிபார்ட்மெண்ட்டில்தான் இருக்காங்க. எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிடலாம்&#8217; என்றார். அடப்பாவி, குடும்பமே கூட்டு சேர்ந்து கொள்ளை அடிக்கிறதோ! தந்தையை இழந்த துக்கத்தில் இருந்து மீள கூட முடியவில்லை. கருணையாவது கத்திரிக்காயாவது. பணம் வேண்டும் சார், பணம் வேண்டும். அது இருந்தால் தான் உயிர் வாழ முடியும். இது தான் நிதர்சனம். இது தான் உண்மை நிலை.</p>
<p>எல்லாமே பணம் என்றாகிவிட்டது. இதில் அண்ணனா தம்பியா, அப்பனா பிள்ளையா, ஒட்டா உறவா? பிறப்பிலிருந்து இறப்பு வரை பணம் பணம் என்று அனைவரையும் இந்த பேய் வாட்டுகிறது. நல்ல வேளை சுவாசிக்கும் காற்றுக்கும் வெளிச்சத்துக்கும் காசு கொடுக்க வேண்டாம். இறைவா, உண்மையிலேயே நீ க‌ருணை உள்ள‌வ‌ன் தான். எதையுமே என்னிட‌ம் இருந்து எதிர்ப்பார்க்காம‌ல் இருக்கிறாயே! ஆனால் உன்னை கோவிலில் நான் பார்க்க‌ வேண்டும் என்றால் அத‌ற்கு த‌னியாக‌ ப‌ண‌ம் கொடுத்து டிக்க‌ட் எடுக்க‌ வேண்டுமே இறைவா! ப‌ண‌த்தை நீ கேட்க‌வில்லை, நீ ப‌டைத்த‌ ம‌னித‌ன் தான் கேட்கிறான்.</p>
<p>ஆக மக்களே! நமது அடுத்த சந்ததியினருக்கு என்ன சொல்லி கொடுக்கிறோமோ இல்லையோ, அவர்கள் கண்டிப்பாக பணம் பண்ண வேண்டும் என்பதை அனைவரும் கண்டிப்பாக சொல்லி கொடுக்க வேண்டும். நீ பெரியவனாக ஆன பிறகு என்னவாக போகிறாய் என்று யாராவது கேட்டால், &#8220;பணம் பண்ணுவேன்&#8217; என்று கூறுமாறு சொல்லி கொடுக்க வேண்டும். இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது?<br />
இந்த பணம் பண்ணும் வித்தையில் தேர்ச்சி பெறாமல் தமது உயிரையே கொடுத்து நமது நாட்டு எல்லையில் காக்கும் படை வீரர்கள், முகம் சுளிக்காமல் நோயாளியின் கழிவை எடுக்கும் நர்ஸுகள், கொதிக்கும் வெயிலில் தார் சாலை போடும் தொழிலாளிகள என்று மிக மிக சிலரின் நல்ல உள்ளங்களினால் தான் அவ்வப்போது நாட்டில் மழை பெய்கிறது. பிழைக்க தெரியாத நேர்மையான மனிதர்கள்! உண்மையிலேயே, க்வியரசர் கூறியது போல,</p>
<p>பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா!</p>
<p>அந்த நல்ல உள்ளங்களை சிரம் தாழ்த்தி வணங்குவோம்!</p>
<br />Posted in Uncategorized  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/madrasthamizhan.wordpress.com/109/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/madrasthamizhan.wordpress.com/109/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/madrasthamizhan.wordpress.com/109/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/madrasthamizhan.wordpress.com/109/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/madrasthamizhan.wordpress.com/109/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/madrasthamizhan.wordpress.com/109/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/madrasthamizhan.wordpress.com/109/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/madrasthamizhan.wordpress.com/109/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/madrasthamizhan.wordpress.com/109/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/madrasthamizhan.wordpress.com/109/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/madrasthamizhan.wordpress.com/109/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/madrasthamizhan.wordpress.com/109/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/madrasthamizhan.wordpress.com/109/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/madrasthamizhan.wordpress.com/109/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=madrasthamizhan.wordpress.com&amp;blog=6510586&amp;post=109&amp;subd=madrasthamizhan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://madrasthamizhan.wordpress.com/2009/08/05/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/feed/</wfw:commentRss>
		<slash:comments>7</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/84c05fa496adcee5164dddae245fddb0?s=96&#38;d=http%3A%2F%2F0.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96&#38;r=G" medium="image">
			<media:title type="html">மெட்ராஸ் தமிழன்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஓய்வு</title>
		<link>http://madrasthamizhan.wordpress.com/2009/05/15/%e0%ae%93%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81/</link>
		<comments>http://madrasthamizhan.wordpress.com/2009/05/15/%e0%ae%93%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81/#comments</comments>
		<pubDate>Fri, 15 May 2009 17:06:59 +0000</pubDate>
		<dc:creator>madrasthamizhan</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://madrasthamizhan.wordpress.com/?p=101</guid>
		<description><![CDATA[ஆரல்வாய்மொழி! எத்தனை அழகான தமிழ் பெயர்! என்னை மிகவும் கவர்ந்த கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரின் பெயர்தான் இது. சுற்றிலும் எங்கு பார்த்தாலும் பசுமை. பசுமையை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஒரு பக்கம் காற்றாலைகள். மறு பக்கம் பச்சை பசேலென்ற வயல் வெளிகள். சில்லென்ற குளிர் காற்று. ஆஹா, என்ன ஆனந்தம்! நாகர்கோவில் அருகே உள்ள தோவாளை என்ற ஊரில் உள்ள எனது நண்பன் வீட்டுக்கு செல்லும்போது தான் நான் ஆரல்வாய்மொழியை பார்த்தேன். அப்பொழுதே [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=madrasthamizhan.wordpress.com&amp;blog=6510586&amp;post=101&amp;subd=madrasthamizhan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஆரல்வாய்மொழி! எத்தனை அழகான தமிழ் பெயர்! என்னை மிகவும் கவர்ந்த கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரின் பெயர்தான் இது.</p>
<p>சுற்றிலும் எங்கு பார்த்தாலும் பசுமை. பசுமையை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஒரு பக்கம் காற்றாலைகள். மறு பக்கம் பச்சை பசேலென்ற வயல் வெளிகள். சில்லென்ற குளிர் காற்று. ஆஹா, என்ன ஆனந்தம்! நாகர்கோவில் அருகே உள்ள தோவாளை என்ற ஊரில் உள்ள எனது நண்பன் வீட்டுக்கு செல்லும்போது தான் நான் ஆரல்வாய்மொழியை பார்த்தேன். அப்பொழுதே தீர்மானித்து விட்டேன், நான் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்த ஊரில் தான் வந்து தங்குவேன் என்று.</p>
<p>ஓய்வு என்றவுடன் எனது நினைவலைகள் பின்னோக்கி செல்கின்றன. நாம் கடைசியாக எப்பொழுது உண்மையிலேயே ஓய்வு எடுத்துக்கொண்டோம்? நினைவு தெரிந்து பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் முதல் நமது பெற்றோர்கள் &#8220;படி படி&#8221; என்று வாட்டுகிறார்கள். ஒரு 15 வருடங்களுக்கு இது போல ஓய்வே இல்லாமல் பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கிறோம். பட்டப்படிப்பு முடிந்தவுடன், &#8216;சரி, இனிமேல் நமக்கு வேலை கிடைத்த பிறகு ஓய்வு கிடைக்கும் இந்த படிப்பிலிருந்து&#8217; என்று நினைக்கிறோம். ஆனால் கல்லூரியை விட்டு வெளியே வந்த பிறகுதான் தெரிகிறது வேலை என்பது குதிரைக்கொம்பு போன்றது என்று. வேலை தேடி அலைந்து திரிந்து கடைசியில் ஒரு வழியாக ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து விடுகிறோம்.</p>
<p>அப்பொழுதாவது &#8216;அக்கடா&#8217; என்று ஓய்வெடுக்க முடிகிறதா? மேலதிகாரி என்ற யாரோ ஒருவனுக்காக அடிமை வாழ்வு வாழ்கிறோம். சரி, கொஞ்சம் பணம் சேர்த்த பிறகு ஓய்வு எடுக்கலாம் என்றால் உடனே வீட்டில் திருமணத்தை செய்து வைத்து விடுகிறார்கள்.</p>
<p>திருமணத்துக்கு பிறகு அல்லவா தெரிகிறது, வாழ்க்கை என்பது எவ்வளவு பெரிய போராட்டம் என்று. ஒரு குழந்தை பிறந்த பிறகு கொஞ்சம் மூச்சு விடலாம் என்றால் அப்பொழுது தான் போராட்டம் இன்னும் அதிகமாக தோன்றுகிறது. குழந்தை வளர வளர நமது தொள்களின் மேல் ஒவ்வொரு கடமையாக ஏறிக்கொண்டே போகிறது. சிலர் பிழைப்புக்காக வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் சென்று அதே அடிமை வாழ்வை வாழ்கிறார்கள்.</p>
<p>ஒரு வழியாக இருக்க வீடு என்று ஒன்றை கட்டிவிட்டால் சிறிது ஓய்வு கிடைக்கும், அது வரை பொறுத்து கொள்ளலாம் என்று மனம் கூறுகிறது. வீடு கட்டியது தான் தாமதம் திடீரென்று நமது குழந்தை குமரனாகவோ குமரியாகவோ மாறிவிட்டதை ஏற்றுக்கொள்ள அதே மனம் மறுக்கிறது. மகனின்/மகளின் கல்விக்கு தேவை பணம். அதை நிறைவேற்ற இன்னும் சில காலம் வேலை செய்ய வேண்டிய கடமை இருக்கிறது.</p>
<p>கல்வி முடிந்தபின் அவர்களுடைய திருமணம். சரி, திருமணத்தை செய்து கொடுத்ததோடு நமது கடமை முடிந்து விட்டது. இனியாவது ஓய்வு பெறலாம் என்று சற்றே கண்ணாடி முன்பு நம்மை பார்த்தால் தலையில் வெள்ளை முடி அல்லது வழுக்கை. கூடவே ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் போன்ற இயற்கையின் பரிசுகள். 60 வயது முடிவதற்கு முன்பாகவே கையில் காசு வரும் என்ற நோக்கோடு மிக சீக்கிரமாகவே &#8220;விருப்ப ஓய்வு&#8221; பெற்றுக்கொண்ட இள முதியோர்கள் திடீரென்று வட்டி விகிதம் இறங்க பெட்ரோல் விலை ஏற &#8220;ஏண்டா ஓய்வு எடுத்துக்கொண்டோம்&#8221; என்ற வெறுப்பில் நாட்களை ஓட்டுபவர்கள் ஒரு பக்கம்.</p>
<p>உடல் நலம் ஒத்துழைக்காவிட்டாலும் பணத்தேவை எனும் நிதர்சனம் வாட்டி வதைக்க, வயது வரம்பை காட்டி கட்டாயமாக பணியிலிருந்து ஓய்வு கொடுத்து அனுப்ப பட்டவர்கள் மற்றொரு புறம்.</p>
<p>சரி, இப்போதாவது ஓய்வு பெறலாம் என்றால் பேரன், பேத்தி என்று பந்தங்களுடன் நம்மை நாமே கட்டி போட்டுக்கொண்டு வாழ்க்கை சக்கரத்தில் அல்லோலப்பட்டு மீளத்தெரியாமல் தவிக்கிறோம்.</p>
<p>என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக உண்மையிலேயே ஓய்வு கிடைக்கும். சலசலவென்று ஓடும் ஆற்றில் காலை வைத்து நீரில் துள்ளி விளையாடும் மீன்கள் நம்மை தொடுவதை பார்த்து ஆனந்த படவேண்டும். மலை மீதிருந்து பார்க்கும் போது தூரத்தெரியும் சூரிய அஸ்தமனத்தை பார்த்து மகிழ வேண்டும். மனிதர்களே இல்லாத நடுக்காட்டில் பாறை மீது அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்ய வேண்டும். பயம் இல்லை, மகிழ்ச்சி இல்லை, துக்கம் இல்லை, கோபம் இல்லை, எதுவுமே இல்லாத அந்த அமைதி வேண்டும். உண்மையான ஓய்வு வேண்டும். கிடைக்குமா இறைவா?</p>
<p>தோவாளை நண்பனின் மைத்துனன் என்னிடம் கூறினான் &#8220;ஆரல்வாய்மொழியா? இந்த கிராமத்தில் என்ன கண்டீர்கள். செளதியில் எனக்கு ஒரு வேலை வாங்கி தருவீர்களா?&#8221;</p>
<br />Posted in Uncategorized  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/madrasthamizhan.wordpress.com/101/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/madrasthamizhan.wordpress.com/101/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/madrasthamizhan.wordpress.com/101/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/madrasthamizhan.wordpress.com/101/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/madrasthamizhan.wordpress.com/101/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/madrasthamizhan.wordpress.com/101/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/madrasthamizhan.wordpress.com/101/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/madrasthamizhan.wordpress.com/101/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/madrasthamizhan.wordpress.com/101/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/madrasthamizhan.wordpress.com/101/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/madrasthamizhan.wordpress.com/101/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/madrasthamizhan.wordpress.com/101/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/madrasthamizhan.wordpress.com/101/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/madrasthamizhan.wordpress.com/101/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=madrasthamizhan.wordpress.com&amp;blog=6510586&amp;post=101&amp;subd=madrasthamizhan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://madrasthamizhan.wordpress.com/2009/05/15/%e0%ae%93%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>10</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/84c05fa496adcee5164dddae245fddb0?s=96&#38;d=http%3A%2F%2F0.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96&#38;r=G" medium="image">
			<media:title type="html">மெட்ராஸ் தமிழன்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>இரயில் பயணங்களில்</title>
		<link>http://madrasthamizhan.wordpress.com/2009/04/21/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-2/</link>
		<comments>http://madrasthamizhan.wordpress.com/2009/04/21/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-2/#comments</comments>
		<pubDate>Tue, 21 Apr 2009 09:23:23 +0000</pubDate>
		<dc:creator>madrasthamizhan</dc:creator>
				<category><![CDATA[இரயில் பயணங்களில்...]]></category>

		<guid isPermaLink="false">http://madrasthamizhan.wordpress.com/?p=96</guid>
		<description><![CDATA[நான் கூறப்போகும் இந்த‌ அனுபவம் எனக்கு ஏற்பட்டது அல்ல,  சூரத்தில் என்னுடன் பணி புரிந்த நண்பன் ராவுக்கு ஏற்பட்டதாகும். இருந்தாலும் படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கும் என்று நினைக்கிறேன். மேலே படியுங்கள். 1990வது வருடம். ராவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலத்தில் சித்தூர் அருகில். அப்போதெல்லாம் சென்னையிலிருந்து சூரத்துக்கு நேரிடையாக செல்லும் ஒரே இரயில் நவஜீவன் எக்ஸ்ப்ரெஸ் என்ற வண்டி தான். ஒரே ஒரு வண்டி என்பதால் அதில் பல நாட்களுக்கு முன்பே முன் பதிவு செய்ய வேண்டும், [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=madrasthamizhan.wordpress.com&amp;blog=6510586&amp;post=96&amp;subd=madrasthamizhan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>நான் கூறப்போகும் இந்த‌ அனுபவம் எனக்கு ஏற்பட்டது அல்ல,  சூரத்தில் என்னுடன் பணி புரிந்த நண்பன் ராவுக்கு ஏற்பட்டதாகும். இருந்தாலும் படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கும் என்று நினைக்கிறேன். மேலே படியுங்கள்.</p>
<p>1990வது வருடம். ராவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலத்தில் சித்தூர் அருகில். அப்போதெல்லாம் சென்னையிலிருந்து சூரத்துக்கு நேரிடையாக செல்லும் ஒரே இரயில் நவஜீவன் எக்ஸ்ப்ரெஸ் என்ற வண்டி தான். ஒரே ஒரு வண்டி என்பதால் அதில் பல நாட்களுக்கு முன்பே முன் பதிவு செய்ய வேண்டும், இல்லயென்றால் உறுதியான இருக்கை கிடைக்காது. அதனால் குறிப்பாக ஆந்திராவிலிருந்து வரும் பலர் பூனா வரை ஒரு இரயிலில் வந்து பிறகு அங்கிருந்து வடக்கே செல்லும் வேறு இரயில்கள் மூலம் சூரத்துக்கு வருவது வழக்கமாக இருந்தது.</p>
<p>சூரத் செல்பவர்களுக்கு பூனா ஒரு transit இரயில் நிலையமாகதான் இருந்தது. ராவும் ஒரு முறை விடுமுறைக்கு ஊருக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது அவ்வாறே பூனாவுக்கு செல்லும் இரயிலில் வந்தான். அவன் வந்த இரயில் வழக்கம் போல தாமதமாக பூனாவுக்கு வந்து சேர்ந்தது. அப்போது இரவு 3 மணி இருக்கும். பொதுவாக பூனாவில் ஒரு 2 அல்லது 3 மணி நேரம் காத்திருந்தபின் சூரத்துக்கு செல்லும் இரயில் வரும். இந்த இரயில் வேறு எங்கிருந்தோ வருகிறது. இதில் ஏதாவது ஒரு பெட்டியில் ஏறி உட்கார்ந்தால் சூரத் சென்றடைவதற்கு ஒரு 4 அல்லது 5 மணி நேரம் ஆகும். (இப்போது route எல்லாம் மாற்றி விட்டார்கள், நான் கூறுவது 1990ல்).</p>
<p>ராவ் பூனா வந்து சேர்வதற்கு தாமதமாகி விட்டது என்று கூறினேன் அல்லவா? அவனுடைய அதிர்ஷ்டம் சூரத் வழியாக அஹமதாபாத் செல்லும் இரயில் மற்றொரு தடத்தில் புறப்படுவதற்கு தயாராக இருந்தது. அவசரம் அவசரமாக இறங்கி சூரத் செல்லும் இரயிலில் ஏறி உட்கார்ந்து விட்டான். இரயிலும் கிளம்பி விட்டது. அப்பாடா, அவன் ஏறிய பெட்டியில் உட்கார இடம் கிடைத்து விட்டது. காலையில் ஊர் போய் சேர்ந்து விடலாம். இரவு 3 மணி என்பதால் மற்ற பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். இரயில் கிளம்பி ஒரு 10 அல்லது 15 நிமிடம் தான் ஆகியிருக்கும். தான் கொண்டு வந்த suitcase பெட்டியை எங்காவது ஜாக்கிரதையாக வைக்கலாம் என்று எண்ணினால், திடீரென்று ஒரு அதிர்ச்சி! அப்போது தான் suitcase பெட்டியை தவற விட்டு விட்டதை உணர்ந்தான்! அடக்கடவுளே! அதில் தானே அவனுடைய துணி மணிகள் எல்லாமே உள்ளன. இரவு படுக்க போகும் முன் அவனுடைய purseஐ கூட அதில் தானே வைத்திருந்தான் (pantல் purseஐ வைத்திருந்தால் ஜேப்டிக்காரர்கள் எடுத்து விடுவார்கள் என்று பயந்து இவன் அதை suitcase பெட்டியில் வைத்துள்ளான். எல்லாம் ஒரு முன் ஜாக்கிரதை முத்தண்ணா போல தான்!) இப்போது அதுவும் கோவிந்தா! என்ன செய்வது என்று தெரியவில்லை.</p>
<p>ஏதோ ஒரு உந்துதலில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்துவிட்டான். இரயிலும் சிறிது தூரம் சென்ற பின் நின்று விட்டது. அவசரம் அவசரமாக இரயிலில் இருந்து கீழே குதித்து பூனா இரயில் நிலையம் நோக்கி இருப்பு பாதை ஓரமாக நடக்க தொடங்கினான். இரவு நேரம் என்பதால் ஒரே கும்மிருட்டு. ஒரு பக்கம் பணமும் suitcaseம் தொலைந்த வருத்தம். மற்றொரு பக்கம் தூக்க கலக்கம் / அசதி. சரி இப்படியே இருப்பு பாதை வழியாக நடந்து போனால் பூனா சென்றடைவதற்குள் விடிந்து விடுமே என்ன செய்வது?</p>
<p>இரவு நிசப்தத்தில் எங்கோ தூரத்தில் வாகனங்கள் செல்லும் சத்தம் கேட்டது. சரி, அங்கு ஏதோ சாலை இருக்கும் போலிருக்கிறது. லாரியோ ஏதாவது வாகனமோ கிடைத்தால் அதில் ஏறிக்கொண்டு பூனா இரயில் நிலையம் வரை சென்று விடலாம் என்று இருப்பு பாதையிலிருந்து திசையை மாற்றி சத்தம் வந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். கும்மிருட்டில் எங்கே நடந்தால் என்ன &#8211; மிதிப்பது நாயின் வாலாகவோ அல்லது பாம்பாகவோ இல்லாமல் இருந்தால் சரி!</p>
<p>கிட்டத்தட்ட ஒரு 25 நிமிடம் நடந்த பின் சாலையை வந்தடைந்து விட்டான். அப்பாடா, ஏதாவது ஒரு வாகனம் கிடைக்காதா? சட்டை pocketஐ தொட்டு பார்த்தான். முந்தைய இரவு தேனீர் அருந்தி விட்டு மீதி இருந்த பணம் 4 ரூபாய் இருந்தது. சரி, வந்தது வரட்டும் என்று சாலையில் நடக்க ஆரம்பித்தான். கிட்டத்தட்ட ஒரு 35 நிமிடங்கள் கடந்த பின் ஒரு கிராமத்தை வந்தடைந்தான்.</p>
<p>அதற்குள் மணி 4.30 ஆகியிருந்தது. அங்கு பார்த்தால் ஒரு ஆட்டோ தென்பட்டது. ஆட்டோவினுள் அதன் ஓட்டுனர் தூங்கிக்கொண்டிருந்தான். சரி, இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை என்று அவனை ராவ் தூக்கத்திலிருந்து எழுப்பினான். &#8220;எப்படியாவது என்னை பூனா இரயில் நிலையத்துக்கு கொண்டு போய் சேர்த்துவிடு&#8221; என்று அந்த ஓட்டுனனிடம் ராவ் கெஞ்சினான். ஆட்டோகாரன் உடனே எழுந்து ராவை ஏற இறங்க பார்த்தான். &#8220;சரி சரி, இன்று நமக்கு வேட்டைதான், வசமாக கிராக்கி சிக்கியிருக்கிறது&#8221; என்று நினைத்திருப்பான் போல். ஒரு ஊதுபத்தியை ஏறி ஆட்டோவினுள் இருந்த ஷிர்டி சாய்பாபா படத்துக்கு முன் ஏற்றிவிட்டு ஆட்டோவை கிளப்பினான். ஒரு 15 நிமிடத்துக்குள் பூனா நகரம் வந்து விட்டது.</p>
<p>வீடுகள் எல்லாம் தெரிகின்றன. ஆனால் இரயில் நிலையம் தான் வரவில்லை. சந்து பொந்துகளில் எல்லாம் ஓட்டிக்கொண்டு பூனா நகரத்தையே வலம் வந்தான். ஒரு வேளை இந்த ஓட்டுனன் நம் சென்னை ஆட்டோகாரன் எவனுக்காவது சொந்தக்காரனாக இருந்திருப்பானோ? கிட்டத்தட்ட ஒரு அரை மணி நேரத்துக்கு பிறகு பூனா இரயில் நிலையம் வந்தே விட்டது. இப்போது தானே பிரச்னையே ஆரம்பமாக போகிறது! ஆட்டோவிலிருந்து இறங்கிய ராவ் ஓட்டுனனிடம் தன்னிடம் இருந்த 4 ரூபாயை கொடுத்து விட்டு &#8220;இதோ பாருப்பா, என்னிடம் இருக்கும் பணம் இவ்வளவுதான். தலைகீழாக புரட்டி போட்டாலும் இதற்கு மேல் ஒரு பைசா கூட கிடையாது. என்னுடைய suitcase தொலைந்து விட்டது&#8221; என்று அவனுடைய சட்டை மற்றும் pant pocket அனைத்தையும் காண்பித்தான்! ஆட்டோக்காரனுக்கு வந்ததே கோபம். ராவை தர்ம அடி அடிக்காத குறை தான்! &#8220;வந்து சேந்தான் பார் சாவு கிராக்கி&#8221; என்று சென்னை செந்தமிழில் நமது ஆட்டோக்காரர்கள் திட்டுவது போல் மராத்தியில் திட்டி தீர்த்தான்.</p>
<p>ஒரு வழியாக பூனா இரயில் நிலையத்துக்குள் நுழைந்து நேராக Station Masterன் அறைக்கு சென்றான். நடந்தவை அனைத்தையும் கூறி &#8220;என்னிடம் சல்லி காசு கூட கிடையாது. நீங்கள் தான் எப்படியாவது எனக்கு ஊர் போய் சேர உதவ வேண்டும்&#8221; என்று கூறினான். அனைத்தையும் பொறுமையாக கேட்ட station master, பெட்டியின் அடையாளங்களை எல்லாம் கேட்டுக்கொண்டார். பிறகு, ஒரு புன்சிரிப்புடன் தன் மேஜைக்கு அடியிலிருந்து ஒரு suitcaseஐ தூக்கி காண்பித்து &#8220;உன் suitcase இது தானா பார்&#8221; என்றார்.</p>
<p>ராவுக்கு இன்ப அதிர்ச்சி. காணாமல் போன பெட்டி கிடைத்து விட்டது! ராவ் பூனாவுக்கு ஒரு இரயிலில் வந்தான் இல்லையா? அவன் பயணம் செய்த அந்த இரயில் பெட்டியை கழற்றி விட்டு மீதி இரயில் பம்பாய் நோக்கி சென்று விட்டிருந்தது. அவனுடைய அதிர்ஷ்டம், ஆந்திராவில் இருந்து வந்த இந்த இரயில் பெட்டிக்கு இது தான் கடைசி நிறுத்தம். இந்த பெட்டியை கழற்றி விட்டவுடன் அதை சுத்தம் செய்வதற்காக இரயில் ஊழியர்கள் உள்ளே சென்றிருக்கிறார்கள். அப்போதுதான் இந்த suitcase அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. அதை station masterஇடம் கொடுத்திருக்கிறார்கள்.</p>
<p>என்ன நண்பர்களே, உழைத்து சம்பாதித்த பொருளை என்றுமே நம்மிடமிருந்து யாரும் பிரிக்க முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணமோ? ராவினுடைய விதி அவனுக்கு அந்த suitcase பெட்டி கிடைக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது. பெட்டி மட்டுமா கிடைத்தது- மறக்க முடியாத ஒரு அனுபவமும் அல்லவா கிடைத்தது?</p>
<br />Posted in இரயில் பயணங்களில்...  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/madrasthamizhan.wordpress.com/96/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/madrasthamizhan.wordpress.com/96/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/madrasthamizhan.wordpress.com/96/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/madrasthamizhan.wordpress.com/96/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/madrasthamizhan.wordpress.com/96/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/madrasthamizhan.wordpress.com/96/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/madrasthamizhan.wordpress.com/96/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/madrasthamizhan.wordpress.com/96/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/madrasthamizhan.wordpress.com/96/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/madrasthamizhan.wordpress.com/96/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/madrasthamizhan.wordpress.com/96/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/madrasthamizhan.wordpress.com/96/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/madrasthamizhan.wordpress.com/96/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/madrasthamizhan.wordpress.com/96/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=madrasthamizhan.wordpress.com&amp;blog=6510586&amp;post=96&amp;subd=madrasthamizhan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://madrasthamizhan.wordpress.com/2009/04/21/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-2/feed/</wfw:commentRss>
		<slash:comments>9</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/84c05fa496adcee5164dddae245fddb0?s=96&#38;d=http%3A%2F%2F0.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96&#38;r=G" medium="image">
			<media:title type="html">மெட்ராஸ் தமிழன்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>செளதியில் வேலை தேடுகிறீர்களா?</title>
		<link>http://madrasthamizhan.wordpress.com/2009/03/23/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b3%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%80%e0%ae%b0/</link>
		<comments>http://madrasthamizhan.wordpress.com/2009/03/23/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b3%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%80%e0%ae%b0/#comments</comments>
		<pubDate>Mon, 23 Mar 2009 10:36:57 +0000</pubDate>
		<dc:creator>madrasthamizhan</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[பாலைவன அனுபவங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://madrasthamizhan.wordpress.com/?p=80</guid>
		<description><![CDATA[நீங்கள் வளைகுடாவிலோ அல்லது செளதியிலோ வேலை தேடுகிறீர்களா? அப்போது இந்த கட்டுரையை கண்டிப்பாக படியுங்கள். எனது நண்பர் கணேஷ் செளதியில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலையில் இருக்கிறார். அவரை பார்ப்பதற்க்காக ஒரு நாள் அவருடைய அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். அவருடைய அலுவலகத்தில் எடுபிடி வேலை செய்வதற்காக புதிதாக கேரளாவை சேர்ந்த ஒருவரை அன்றுதான் நியமித்திருந்தார்.  எனது நண்பரிடம், &#8220;என்ன, புதிதாக ஆள் சேர்த்திருக்கிறீர்கள் போல இருக்கிறதே&#8221; என்றேன். அதற்கு அவர் அந்த ஆளை பற்றி கூற ஆரம்பித்தார். அவருடைய [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=madrasthamizhan.wordpress.com&amp;blog=6510586&amp;post=80&amp;subd=madrasthamizhan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>நீங்கள் வளைகுடாவிலோ அல்லது செளதியிலோ வேலை தேடுகிறீர்களா? அப்போது இந்த கட்டுரையை கண்டிப்பாக படியுங்கள்.</p>
<p>எனது நண்பர் கணேஷ் செளதியில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலையில் இருக்கிறார். அவரை பார்ப்பதற்க்காக ஒரு நாள் அவருடைய அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். அவருடைய அலுவலகத்தில் எடுபிடி வேலை செய்வதற்காக புதிதாக கேரளாவை சேர்ந்த ஒருவரை அன்றுதான் நியமித்திருந்தார்.  எனது நண்பரிடம், &#8220;என்ன, புதிதாக ஆள் சேர்த்திருக்கிறீர்கள் போல இருக்கிறதே&#8221; என்றேன். அதற்கு அவர் அந்த ஆளை பற்றி கூற ஆரம்பித்தார். அவருடைய பெயர் சோமன்.  அவருக்கு நேர்ந்த அனுபவங்களை கேளுங்கள்.</p>
<p>9 வருடங்களுக்கு முன்பு  கொச்சியிலிருந்த ஒரு ஏஜெண்ட் மூலமாக தோட்டக்காரன் வேலைக்கு சோமனை ஒரு செளதிக்காரன் தேர்ந்தெடுத்தான். சோமன் 8-வது வகுப்பு வரைதான் படித்துள்ளார். வீட்டில் வறுமை காரணமாக, &#8216;சரி, செளதிக்கு போய் கொஞ்சம் சம்பாதித்துவிட்டு வருவோம், பசி பிரச்னையாவது தீரும்&#8217; என்ற நம்பிக்கையில் தோட்டக்காரன் வேலைக்கு ஒப்புக்கொண்டார். மாதம் 800 ரியால் சம்பளம், 2 வருடங்களுக்கு ஒரு முறை விடுப்பு என்று ஒப்பந்தம் போடப்பட்டது. வீட்டில் இருக்கும் நகைகளை விற்று சிறிது கடனும் வாங்கி ஏஜெண்ட்டுக்கு 75000 ரூபாய் கொடுத்தார் சோமன். &#8220;எப்படியும் செளதிக்கு போய் சம்பாதிக்க போகிறோம், 2 வருடங்களில் இந்த கடனை எல்லாம் அடைத்து விடலாம்&#8221; என்று நினைத்தார்.</p>
<p>செளதிக்கு வந்து சேர்ந்த உடனேயே சோமனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. விமான நிலையத்தில் அவரை வரவழைக்க வந்திருந்த செளதிக்காரன், முதலில் அவருடைய கடவுச்சீட்டை (passport) பிடுங்கிக்கொண்டான். பிறகு வண்டியில் உட்கார வைத்து பல மணி நேரம் பாலைவனத்தில் அவரை அழைத்து சென்றான்.</p>
<p>வெகு தூரம் பாலைவன மணலில் சென்ற பிறகு கீற்று கொட்டகையை போல ஒரு இடம் தென்பட்டது. அந்த இடத்தை சுற்றி ஒரு 25 ஒட்டகங்கள் இருந்தன. வண்டியை நிறுத்திய செளதி, சோமனை இறங்க சொன்னான். ஒரு பெரிய  நிறைய தண்ணீரையும் &#8216;கபூஸ்&#8217; என்ற சுக்கா ரொட்டி ஒரு 15ம் கொடுத்து விட்டு, இனிமேல் இந்த ஒட்டகங்களை பார்த்து கொள்வது தான் உன்னுடைய வேலை என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.</p>
<p>வாரம் ஒரு முறை அந்த செளதிக்காரன் வந்து தண்ணீரும் 15 கபூஸையும் கொடுத்துவிட்டு சென்றுவிடுவான். பேச்சு துணைக்கு கூட அள் இல்லை. மைல் கணக்கில் வெறும் மணல் தான். அவருடைய நிலைமையை யோசித்து பாருங்கள். ஒரு நாள், இரண்டு நாட்கள் இல்லை, ஒரு வாரம் இரண்டு வாரங்கள் இல்லை, 5 வருடங்கள் இதே போல கழிந்துவிட்டன. சோமனின் உடல் நலமும் வெகுவாக பாதிப்படைந்தது. ஆனால் அதை விட அவரின் மனம் கிட்டத்தட்ட பித்து பிடித்தது போல ஆகிவிட்டது.</p>
<p>ஒரு முறை இதே போல செளதிக்காரன்  வந்த போது, சோமன் அவனிடம்  தான் மருத்துவரை பார்க்க வேண்டும் என்று கூறினார். அவர் மேல் பரிதாபப்பட்டு செளதிக்காரன் அவரை அழைத்துக்கொண்டு சில மணி நேரம் பயணம் செய்து கடைசியில் ஜூபைல் என்கிற ஊருக்கு வந்து சேர்ந்தான். அங்கு உள்ள மருத்துவமனையில் மருத்துவரை பார்ப்பதற்காக வெளியே உட்கார்ந்திருந்தார்கள். 5 வருடங்களுக்கு பிறகு வெளி மனித முகத்தை பார்த்த சோமனுக்கு எப்படியாவது அங்கிருந்து தப்பிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.</p>
<p>அந்த மருத்துவமனையில் எனது நண்பர் கணேஷ் தனக்கு உடல் நலம் சரியில்லை என்பதால் சென்றிருந்தார். யாருடனோ தொலைபேசியில் மலையாளத்தில் பேசிக்கொண்டிருந்த போது சோமன் அதை கேட்டுவிட்டார். உடனே அவரிடம் ஓடி வந்து அவரது கால்களில் விழுந்து &#8220;எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்&#8221; என்று கதறினார்.</p>
<p>அதற்குள் கூட்டம் சேர்ந்துவிட்டது. அந்த செளதிக்காரனுக்கும் என்னவோ போல் ஆகிவிட்டது.</p>
<p>தெய்வாதீனமாக அதே சமயத்தில் கணேஷுக்கும் அவரது அலுவலகத்தில் வேலை செய்ய ஒரு ஆள் தேவைப்பட்டது. உடனே அவர் செளதிக்காரனிடம் சோமனுடைய‌ விசாவை இவரது நிறுவனத்துக்கு மாற்றி தருமாறு கேட்டார். அதற்குண்டான செலவுகளை தனது நிறுவனமே ஏற்றுக்கொள்ளும் என்றும் கூறினார். முதலில் இதற்கு ஒப்புக்கொள்ளாத செளதிக்காரன் அரை மனதாக பிறகு ஒப்புக்கொண்டான். விசா மாற்றப்படும் வரை சோமன் தனது அலுவலகத்திலேயே தங்கிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார் (கணேஷ் அந்த நிறுவனத்தின் மேலாளர் என்பதால் இன்னும் வசதியாகிவிட்டது).</p>
<p>சோமனுக்கு கையில் பணமே இல்லை. இவருக்கு பேசியபடி 800 ரியால் தராமல் மிக மிக குறைந்த சம்பளத்தை 5 வருடங்களுக்கு கணக்கு பார்த்து ஒட்டுமொத்தமாக செளதி கொடுத்தான். எப்படியாவது இவனிடமிருந்து தப்பித்தால் போதும் என்று சோமனும் அதற்கும் ஒப்புக்கொண்டார்.ஒரு 10 நாட்களில் சோமனுடைய விசா கணேஷுடைய நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.  அன்று தான் அவரும் எனது நண்பரது அலுவலகத்தில் சேர்ந்திருந்தார்.</p>
<p>அவரது அனுபவங்களை கேட்ட பிறகு எனக்கு என்னவோ போல ஆகிவிட்டது. நானும் எனது நண்பரும் பேசிக்கொண்டிருக்கும் போதே சோமன் இரு கோப்பைகளில் எங்களுக்கு தேனீரை கொண்டு வந்து வைத்தார். பிறகு அங்கேயே ஒரு ஓரமாக தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தார்.</p>
<p>எனது நண்பர் &#8220;என்னப்பா?&#8221; என்று கேட்க, சோமன் மிகவும் தயங்கி தயங்கி , &#8220;நான் ஊருக்கு பேசி ரொம்ப நாள் ஆகிவிட்டது. தயவு செய்து என்னுடைய ஊருக்கு போன் போட்டு கொடுக்கிறீர்களா&#8221; என்று பரிதாபமாக கேட்டார். உடனே கணேஷ் தன்னுடைய கைப்பேசியிலிருந்தே அவருடைய கிராமத்துக்கு போன் செய்தார். அப்பொழுதெல்லாம் கைப்பேசி இப்போது இருப்பதை போன்று அனைவரிடமும் இல்லை. இவரது வீட்டுக்கு 5 வீடு தள்ளி ஒரு வீட்டில் போன் இருந்தது. &#8220;செளதியிலிருந்து சோமன் பேசுகிறேன், என்னுடைய மனைவியை கொஞ்சம் கூப்பிடுகிறீர்களா? நான் 5 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் போன் செய்கிறேன்&#8221; என்று கூறினார்.</p>
<p>வாழ்க்கையிலேயே மிக நீண்ட 5  நிமிடங்கள் அதுவாகத்தான் இருந்திருக்கும். சோமனுக்கு கை நடுங்க ஆரம்பித்து விட்டது. மீண்டும் அதே எண்ணுக்கு போன் செய்தார்.</p>
<p>&#8220;சாந்தா&#8230;&#8221; என்று மிகவும் சன்னமான குரலில் ஆரம்பித்தார். அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட அவரால் பேச முடியவில்லை. ஒரு நிமிடம் முழுவதும் இங்கே இவரும் ஊரில் அவரது மனைவியும் &#8216;ஓ&#8217; வென்று விடாமல் அழ ஆரம்பித்தனர்.அந்த ஒரு நிமிடத்துக்கு இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. வெறும் அழுகை தான். கூடி இருந்த எங்கள் அனைவருக்குமே கண்கள் கலங்கிவிட்டன. 5 வருடங்களாக இவர் தன் மனைவி மக்களிடம் பேசவே இல்லை. இவர் உயிருடன் இருக்கிறாரா இல்லை இறந்துவிட்டாரா என்றே தெரியாமல் அவரது குடும்பம் இத்தனை நாட்கள் தவித்து கொண்டு இருந்திருக்கிறது.</p>
<p>இப்படியும் கூட மனிதர்களா? இவரை மாதிரி எத்தனையோ இந்தியர்கள் இங்கு செளதியில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக மீன்பிடி தொழிலில் இருப்பவர்கள், பெட்ரோல் பங்க்குகளில் வேலை செய்பவர்கள், தினக்கூலி வேலை செய்பவர்கள், சாலை போடுபவர்கள், பண்ணைகளில் வேலை செய்பவர்கள் போன்றவர்களுடைய பாடு மிக மிக பரிதாபகரமானது. பலருக்கு சம்பளம் கொடுத்து மாதக்கணக்காகிறது. பிச்சைக்காரர்களை போல பிறரை நம்பி வாழ வேண்டிய நிலைமை இவர்களுக்கு.</p>
<p>இந்திய தூதரகமும் இவர்களை கண்டுகொள்வதில்லை என்று ஒரு புகார் உள்ளது. ஒரு முறை இதை பற்றி தூதரக அதிகாரி ஒருவரிடம் நேரேயே கேட்டுவிட்டேன். &#8220;பிரிட்டன், அமெரிக்க தூதரகங்கள் தங்களது குடிமக்களை எப்படி பாதுகாக்கின்றன? ஒரு வெள்ளைக்காரனைக்கூட நீங்கள் சிறையில் அடைக்க முடியாது. அந்த அளவுக்கு அவர்களது தூதரகம் மிக மிக பலமானது. இந்தியர்களை மட்டும் ஏன் இப்படி நீங்கள் பாதுகாக்க முடியவில்லை?&#8221; என்று கேட்டேன். அதற்கு அவர் கூறியது வியப்பாக இருந்தது. &#8220;செளதியில் இந்தியர்கள் மட்டுமே 5 மில்லியன் பேர் இருக்கிறார்கள். இதில் 90% மிக மிக குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறார்கள். இத்தனை பேருக்கு நாங்கள் எப்படி சேவை செய்ய முடியும்? எங்களால் முடிந்த வரை உதவி செய்கிறோம்&#8221; என்றார்.</p>
<p>இதற்கு எல்லாம் முடிவு கட்ட வேண்டும் என்றால் நமது மக்களுக்கு முதலில் செளதியை பற்றி விபரங்களை தெரிந்தவர்கள் எடுத்து கூற வேண்டும். &#8220;எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்து ஏஜெண்ட்டிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாவது செளதியில் வேலை வாங்கி சென்று விடவேண்டும்&#8221; என்று நினைப்பவர்கள் இருக்கும் வரை இந்த நிலைமை மாறாது.</p>
<p>&#8220;எப்படியாவது செளதிக்கு வந்து விட வேண்டும், அது எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை&#8221; என்று நினைப்பவர்களுக்கு இங்கு உள்ள நிலைமையை எடுத்து கூற வேண்டும். நமது அரசாங்கத்தை நம்பி பயனில்லை. முதலில் நம்மை நாமே பாதுகாத்து கொள்ள வேண்டியது அவசியம்.</p>
<p>இப்படி ஏமாற்றப்படுபவர்கள் ஒன்றுமே அறியாத அப்பாவிகள் தான். நம்முடைய பாமர மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும். ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி செளதிக்கு வர தயாராக இருப்பவர்கள் ஏன் தங்களுடைய சொந்த ஊரிலேயே அந்த ஒரு லட்சம் ரூபாயை முதலீடாக போட்டு ஒரு சிறிய பெட்டிக்கடை ஆரம்பிக்க கூடாது? கிராமங்களில் போணி ஆகவில்லையா? சென்னை போன்ற நகரங்களில் இப்போதெல்லாம் தச்சு வேலை செய்பவர்கள், பிளம்பர்கள், எலெக்ட்ரீஷியன்கள் போன்றவர்களுக்கு ஏக கிராக்கி. இதில் ஏதாவது ஒரு தொழிலை செய்யலாம். கார் மெக்கானிக்குகள் எவ்வளவு பணம் செய்கிறார்கள் தெரியுமா(குறை கூற வரவில்லை, அந்த அளவுக்கு அவர்களுக்கு Demand இருக்கிறது). அட ஒன்றுமே தெரியாதவரா? சென்ட்ரல் இரயில் நிலையத்திலோ கோயம்பேடிலோ சென்னை துறைமுகத்திலோ சுமை தூக்கலாமே. கெளரவமாகவும் நேர்மையாகவும் வாழ ஆயிரம் வழிகள் உள்ளனவே.</p>
<br />Posted in Uncategorized Tagged: பாலைவன அனுபவங்கள் <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/madrasthamizhan.wordpress.com/80/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/madrasthamizhan.wordpress.com/80/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/madrasthamizhan.wordpress.com/80/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/madrasthamizhan.wordpress.com/80/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/madrasthamizhan.wordpress.com/80/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/madrasthamizhan.wordpress.com/80/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/madrasthamizhan.wordpress.com/80/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/madrasthamizhan.wordpress.com/80/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/madrasthamizhan.wordpress.com/80/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/madrasthamizhan.wordpress.com/80/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/madrasthamizhan.wordpress.com/80/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/madrasthamizhan.wordpress.com/80/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/madrasthamizhan.wordpress.com/80/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/madrasthamizhan.wordpress.com/80/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=madrasthamizhan.wordpress.com&amp;blog=6510586&amp;post=80&amp;subd=madrasthamizhan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://madrasthamizhan.wordpress.com/2009/03/23/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b3%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%80%e0%ae%b0/feed/</wfw:commentRss>
		<slash:comments>14</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/84c05fa496adcee5164dddae245fddb0?s=96&#38;d=http%3A%2F%2F0.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96&#38;r=G" medium="image">
			<media:title type="html">மெட்ராஸ் தமிழன்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>சூரத் நினைவுகள்</title>
		<link>http://madrasthamizhan.wordpress.com/2009/03/04/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
		<comments>http://madrasthamizhan.wordpress.com/2009/03/04/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Wed, 04 Mar 2009 11:22:12 +0000</pubDate>
		<dc:creator>madrasthamizhan</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[சூரத் நினைவுகள்]]></category>

		<guid isPermaLink="false">http://madrasthamizhan.wordpress.com/?p=78</guid>
		<description><![CDATA[சூரத்திலிருந்து பம்பாய்க்கு அடிக்கடி அலுவலக விஷயமாக இரயிலில் செல்ல வேண்டி இருந்தது. சூரத்திலிருந்து காலை 5.30 மணிக்கு &#8220;பறக்கும் ராணி&#8221; (Flying Rani) என்ற இரயிலில் தான் நான் வழக்கமாக செல்வேன். இது பம்பாய்க்கு 10 மணி அளவில் சென்று விடும். அதே போல் மாலை 5.30 மணி அளவில் பம்பாயிலிருந்து கிளம்பி சூரத்துக்கு இரவு 10 மணிக்கு வந்து சேர்ந்து விடும். ஒரே நாளில் பம்பாய் சென்று வர வசதியாக இருந்ததால் இந்த இரயில் மிகவும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=madrasthamizhan.wordpress.com&amp;blog=6510586&amp;post=78&amp;subd=madrasthamizhan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>சூரத்திலிருந்து பம்பாய்க்கு அடிக்கடி அலுவலக விஷயமாக இரயிலில் செல்ல<br />
வேண்டி இருந்தது. சூரத்திலிருந்து காலை 5.30 மணிக்கு &#8220;பறக்கும் ராணி&#8221; (Flying Rani)<br />
என்ற இரயிலில் தான் நான் வழக்கமாக செல்வேன். இது பம்பாய்க்கு 10 மணி<br />
அளவில் சென்று விடும். அதே போல் மாலை 5.30 மணி அளவில் பம்பாயிலிருந்து கிளம்பி சூரத்துக்கு இரவு 10 மணிக்கு வந்து சேர்ந்து விடும். ஒரே நாளில்<br />
பம்பாய் சென்று வர வசதியாக இருந்ததால் இந்த இரயில் மிகவும் பிரபலமாக‌<br />
இருந்தது. அத‌னால் எப்போதுமே இந்த‌ இர‌யிலில் கூட்ட‌ம் இருந்து கொண்டே<br />
இருக்கும்.</p>
<p>முன் ப‌திவு செய்யாத‌வ‌ர்க‌ள் கூட‌ இந்த‌ இர‌யிலில் முன்பதிவு<br />
செய்தவர்கள் பெட்டியில் ஏறி ஏதாவ‌து காலி இருக்கையில் அம‌ர்ந்து<br />
விடுவார்க‌ள். பிற‌கு ப‌ய‌ண‌ச்சீட்டு ப‌ரிசோத‌க‌ர் வ‌ந்த‌வுட‌ன் முன்<br />
ப‌திவுக்கான‌ க‌ட்ட‌ண‌த்தை கொடுத்து விடுவார்க‌ள். இது வ‌ழ‌க்க‌மாக‌<br />
ந‌ட‌க்கும் ஒன்று தான்.</p>
<p>இதே போல், ஒரு முறை ப‌ம்பாய் செல்வ‌த‌ற்காக‌ நான் இந்த‌ இர‌யிலில் ஏறி<br />
என‌து இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன். என‌து ப‌க்க‌த்து இருக்கை<br />
காலியாக‌ இருந்த‌து. ச‌ரி, ஒரு வேளை இந்த‌ இருக்கைக்கான‌ ஆள் வ‌ர‌வில்லை<br />
போலிருக்கிற‌து என்று நினைத்துக்கொண்டேன். இர‌யில் கிள‌ம்பி சிறிது<br />
தூர‌ம் சென்றிருக்கும். மிக‌வும் அழுக்கான‌ குர்தாவுட‌ன் ஒரு ஆள் அந்த‌<br />
காலி இருக்கையில் வ‌ந்து அம‌ர்ந்து கொண்டான்.</p>
<p>என‌க்கோ உள்ளூர பயம். &#8216;இவ‌னை பார்த்தால் பிச்சைக்கார‌ன் போல‌<br />
இருக்கிறான். ச‌ம‌ய‌ம் பார்த்து ந‌ம்முடைய‌ ப‌ர்ஸை அபேஸ் செய்ய‌<br />
போகிறான். நாம் தான் உஷாராக‌ இருக்க‌ வேண்டும்&#8217; என்று<br />
நினைத்துக்கொண்டேன். இர‌யில் கிள‌ம்பி ஒரு முக்கால் ம‌ணி நேர‌ம்<br />
இருக்கும். ஒரு சிறிய‌ ட‌ப்பாவை திற‌ந்தான். உள்ளே ம‌ஞ்ச‌ள் நிற‌த்தில்<br />
ஜிலேபி இருந்த‌து. என்னிட‌ம் ஒரு ஜிலேபியை கொடுத்தான். நான் உஷாராக‌<br />
ம‌றுத்து விட்டேன். அவ‌ன் விட‌வில்லை. நான் க‌டைசியில் என‌க்கு உட‌ல்<br />
ந‌ல‌ம் ச‌ரியில்லை என்று கூறி ச‌மாளித்து விட்டேன்.</p>
<p>&#8216; இவ‌ன் ப‌ய‌ங்க‌ர‌மான‌ ஆளாக‌ இருப்பான் போலிருக்கிற‌தே. முத‌ல்<br />
ஜிலேபியை என்னிட‌ம் கொடுத்த‌திலேயே தெரிந்து விட்ட‌து இவ‌ன் ஏதோ ஒரு<br />
திட்ட‌த்துட‌ன் தான் வ‌ந்திருக்கிறான்&#8217;</p>
<p>இரயில் வேகமாக சென்று கொண்டிருந்தது. திடீரென்று என்னிடம் பேச்சு கொடுக்க<br />
ஆரம்பித்தான்.</p>
<p>&#8220;நீங்கள் பம்பாய் செல்கிறீர்களா?&#8221;</p>
<p>&#8220;ஆமாம்&#8221;<br />
(மனதுக்குள் : இல்லடா கலப்பை, ஆப்கானிஸ்தான் செல்கிறேன்)</p>
<p>&#8220;இரயில் சரியான நேரத்தில் தான் செல்கிறது, இல்லையா?&#8221;</p>
<p>&#8220;ஆமாம்&#8221;<br />
(டேய், டேய், என‌க்கு தான் நேர‌ம் ச‌ரி இல்லை)</p>
<p>&#8220;நீங்க‌ள் சூர‌த்தில்தான் இருக்கிறீர்க‌ளா&#8221;</p>
<p>&#8220;ஆமாம்&#8221;<br />
(இல்லை, செள‌தியில் இருக்கிறேன். அங்கிருந்து ஒட்டக‌த்தின் மேல் ஏறி<br />
சூர‌த்துக்கு வ‌ந்தேன்)</p>
<p>இப்ப‌டியாக‌ அவ‌ன் கேட்ட‌ கேள்விக‌ளுக்கெல்லாம் &#8220;ஆமாம்&#8221; என்று ஒரே ப‌தில்<br />
கூறினேன். பேச்சை வ‌ள‌ர்த்தால் தானே பிர‌ச்னை?</p>
<p>திடீரென்று எனது வலது கையை பிடித்து இழுத்து அதில் இருந்த மோதிரத்தை<br />
உன்னிப்பாக கவனித்தான். நான் வெலவெலத்து போய் விட்டேன். உடனே எனது கையை இழுத்து கொண்டு ஒரு முறை முறைத்தேன். எனது மோதிரத்தில் ஒரு ஒற்றை வைரக்கல் இருந்தது. அதை தான் அவன் உற்று பார்த்தான். எனது சந்தேகம் சரியாகி விட்டது போல. இவனிடம் 200% உஷாராக இருக்க வேண்டும்.</p>
<p>அவன் சிரித்துக்கொண்டே, &#8220;இது நல்ல வைரம்&#8221; என்றான். அடப்பாவி, தீர்மானமே<br />
செய்து விட்டான் போல இருக்கிறது.</p>
<p>அதற்கு பிறகு எனக்கு இருப்பே கொள்ளவில்லை. &#8216;எப்படா பம்பாய் வரும்&#8217; என்று<br />
ஆகிவிட்டது. இந்த திருட்டுப்பயலிடமிருந்து எப்பொழுது தப்பிக்க போகிறோம்<br />
என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.</p>
<p>இரயில் திடீரென்று மெதுவாக செல்ல ஆரம்பித்தது. ஜன்னல் வழியே வெளியே<br />
பார்த்தேன். இப்போது இரயில் நின்றே விட்டது. சிகப்பு சிக்னலில் இரயில்<br />
நின்று கொண்டிருந்தது. இன்னும் இரண்டு நிமிடங்களில் போரிவலி என்ற இரயில்<br />
நிலையம் வந்து விடும். இந்த நிலையத்தில் முக்கால்வாசி பேர் இறங்கி<br />
விடுவார்கள். வண்டி சிக்னலுக்காக காத்திருந்தபோது போரிவலியில் இறங்க<br />
வேண்டியவர்கள் தத்தம் சாமான்களை இறக்கி கீழே இறங்குவதற்கு தயாராக<br />
இருந்தார்கள்.</p>
<p>அப்போது என் அருகில் இருந்த திருட்டு பிச்சைக்காரன் தனது இடுப்பிலிருந்து<br />
ஒரு சுருக்கு பையை எடுத்தான். ஒரே ஒரு நொடி தான். அந்த பையை நன்றாக<br />
முடித்து போட்டு தனது அழுக்கு குர்த்தாவுக்குள் வைத்துக்கொண்டான். ஆனால்<br />
அந்த ஒரு நொடியில் அந்த பைக்குள் இருந்ததை நான் பார்த்து விட்டேன்.<br />
எனக்கு மிக பெரிய அதிர்ச்சி. அந்த பைக்குள் நான் பார்த்தது பல விதமான<br />
சிறிய கற்களை போன்ற பொருட்கள். ஆனால் பளபளவென்று மின்னியது போல இருந்தது.</p>
<p>இரயில் மெதுவாக நகர்ந்து தளத்துக்குள் நுழைந்தது. நான் அவ‌னை பார்த்து<br />
&#8220;நீங்க‌ள் என்ன‌ வேலை செய்கிறீர்க‌ள்?&#8221; என்று கேட்டேன். அந்த<br />
&#8216;பிச்சைக்காரன்&#8217;  &#8221;நான் சூரத்தில் வைரங்களை வெட்டும் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறேன்&#8221; என்று கூறிவிட்டு கீழே இறங்கி விட்டான்.</p>
<p>அவனது சுருக்கு பையில் இருந்தது அத்தனையும் வைர கற்கள் என்று அப்போது<br />
தான் எனக்கு உறைத்தது. இத்தனை நேரம் ஒரு சாதாரண பயணி போல என் அருகில் அமர்ந்து வந்திருக்கிறான். தன்னிடம் இருக்கும் பொருள் யாருக்கும்<br />
தெரியக்கூடாது என்பதற்காக இப்படி அழுக்கு உடையில் வந்திருந்தானோ என்னவோ.</p>
<p>ஒருவரை அவரின் உடைகளை வைத்து எடை போடுவது எவ்வளவு தவறு என்று அன்று எனக்கு தெரிந்தது. அந்த இரயில் பயணமும் ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.</p>
<p>நான் என்னவோ அவன் என்னுடைய ஒற்றைக்கல் வைர மோதிரத்தை<br />
தான் திருடப்போகிறான் என்று நினைத்து கொண்டிருந்தேன். அவன் தன்னிடம்<br />
இருக்கும் வைரங்களை மற்றவர்கள் திருடிவிடக்கூடாது என்று பிச்சைக்காரன்<br />
உடையில் இருந்தானோ என்னவோ? கவியரசர் அனுபவித்து அல்லவா<br />
எழுதியிருக்கிறார்,</p>
<p>&#8216;ஒருவன் மனது ஒன்பதடா<br />
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா&#8217;</p>
<br />Posted in Uncategorized Tagged: சூரத் நினைவுகள் <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/madrasthamizhan.wordpress.com/78/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/madrasthamizhan.wordpress.com/78/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/madrasthamizhan.wordpress.com/78/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/madrasthamizhan.wordpress.com/78/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/madrasthamizhan.wordpress.com/78/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/madrasthamizhan.wordpress.com/78/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/madrasthamizhan.wordpress.com/78/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/madrasthamizhan.wordpress.com/78/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/madrasthamizhan.wordpress.com/78/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/madrasthamizhan.wordpress.com/78/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/madrasthamizhan.wordpress.com/78/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/madrasthamizhan.wordpress.com/78/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/madrasthamizhan.wordpress.com/78/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/madrasthamizhan.wordpress.com/78/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=madrasthamizhan.wordpress.com&amp;blog=6510586&amp;post=78&amp;subd=madrasthamizhan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://madrasthamizhan.wordpress.com/2009/03/04/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>9</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/84c05fa496adcee5164dddae245fddb0?s=96&#38;d=http%3A%2F%2F0.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96&#38;r=G" medium="image">
			<media:title type="html">மெட்ராஸ் தமிழன்</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>
